Switch to
செய்திகள்
இலங்கை அரசாங்கம் குற்றச் செயல்களை நிறுத்த வேண்டும்: சர்வதேச மன்னிப்பு சபை
[ செவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2010, 10:15.13 AM ]
இலங்கை அரசாங்கம் ஊடகத்துறை, அரசியல் செயற்பாடுகள் மற்றும் மனித உரிமைகள் என்பவற்றுக்கு எதிராக மேற்கொள்ளும் வன்முறைகளையும் அடாவடித்தனங்களையும் நிறுத்த வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. [மேலும்]
மஹிந்தவின் வெற்றி தொடர்பில் புலம்பெயர்ந்த சிங்களவர்கள் மத்தியில் மாறுப்பட்ட கருத்துக்கள்
[ செவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2010, 10:11.34 AM ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மீண்டும் ஜனதிபதியாக தெரிவானமை தொடர்பில் வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த இலங்கையர்கள் மத்தியில் ஒரு கலப்பு எண்ணக்கரு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
மாவீரர் துயிலும் இல்லங்களின் அழிப்பும், கருணாவின் புரளியும்...
[ செவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2010, 08:56.10 AM ] []
அண்மைக் காலமாக தாயகத்தில் மாவீரர் துயிலுமில்லங்கள் மற்றும் மாவீரர் மண்டபங்கள் சிறீலங்காவின் இராணுவத்தால் அழிக்கப்பட்டு வருகின்றது. அதைவிட இராணுவ நினைவுத்தூபிகள் வேறு அமைக்கப்பட்டு வருகின்றது. [மேலும்]
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் கணனிகள் மூலம் மாற்றியமைக்கப்படவில்லை: கணனி நிபுணர்
[ செவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2010, 08:51.52 AM ]
இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் பெறுபெறுகளை மாற்றியமைப்பதற்காக முக்கிய கணனி நிபுணர் ஒருவரின் பங்களிப்பு இருக்க வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
பொதுத்தேர்தலுக்கு முன்னர் புதிதாக 2000 கிராம சேவகர் நியமனங்கள் வழங்க அரசு திட்டம்
[ செவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2010, 07:50.39 AM ]
வடக்கு, கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் நிலவும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கிராம சேவகர் வெற்றிடங்களை எதிர்வரும் பொதுத்தோ்தலுக்கு முன்னதாக நிரப்பவுள்ளதாக இலங்கையின் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு உத்தேசித்துள்ளதாக அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார். [மேலும்]
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் என்னையும், சில உறுப்பினர்களையும் கொலை செய்ய சதித்திட்டம்: இரா.சம்பந்தன்
[ செவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2010, 05:15.30 AM ]
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் என்னையும், எங்கள் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரையும் கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். [மேலும்]
கட்சி பேதமின்றி அனைவரும் நாட்டை அபிவிருத்தி செய்ய இணைந்து செயற்பட வேண்டும்: ஜனாதிபதி
[ செவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2010, 04:05.05 AM ]
கட்சி பேதமின்றி அனைவரும் நாட்டை அபிவிருத்தி செய்ய இணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கதிர்காமத்தில் தெரிவித்துள்ளார். [மேலும்]
பொதுத் தேர்தலில் ஜாதிக ஹெல உறுமய ஆளும் கட்சியுடன் இணைந்து போட்டியிடத் தீர்மானம்
[ செவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2010, 03:54.44 AM ]
எதிர்வரும் பொதுத்தேர்தலின் போது ஜாதிக ஹெல உறுமய கட்சி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட தீர்மானித்துள்ளது. [மேலும்]
தேர்தல் முடிவுகள் சரியானவை என உறுதியான உத்தரவாதமளிக்க முடியும்: தேர்தல் செயலகம்
[ செவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2010, 03:45.52 AM ]
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் சரியானவை என்பதனை உறுதியாக உத்தரவாதப்படுத்த முடியும் என தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது. [மேலும்]
அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறைக்கப்படும்: கெஹலிய ரம்புக்வெல
[ செவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2010, 03:39.43 AM ]
ஆளும் கட்சி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு கிரமமான முறையில் குறைக்கப்படும் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். [மேலும்]
புலிகளுக்கு ஆதரவு வழங்கிய முன்னாள் கடற்படை உயரதிகாரி சுவீடனில் அரசியல் தஞ்சம்
[ செவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2010, 03:33.36 AM ]
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கிய முன்னாள் கடற் படை உயரதிகாரி ஒருவர் சுவீடனில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
எவ்வாறான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் அரசியல் பயணம் தொடரும்: சரத் பொன்சேகா
[ செவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2010, 03:30.43 AM ]
எவ்வாறான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் தமது அரசியல் பயணம் தொடரும் என ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். [மேலும்]
புலிகளுடனான போரில் ஈடுபட்ட இராணுவத்தினர் மீது விசாரணை கிடையாது: கோத்தபாய ராஜபக்ஷ
[ செவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2010, 02:27.13 AM ]
விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரின் செயற்பாடுகள் குறித்து எந்த வகையான விசாரணைக்கும் அனுமதியளிக்கப் போவதில்லை என்று இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ பிபிசியிடம் தெரிவித்துள்ளார். [மேலும்]
எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டம் குறித்து பொலிஸார் எச்சரிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2010, 02:21.18 AM ]
அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் எதிராக எதிர்க்கட்சியினரால் நாளை  புதன்கிழமை கொழும்பில் நடத்தப்படவுள்ள ஆர்ப்பாட்டம், சமாதானத்திற்கு குந்தகம் விளைவிக்குமனால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. [மேலும்]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எரிக் சொல்ஹெய்ம் வாழ்த்து
[ திங்கட்கிழமை, 01 பெப்ரவரி 2010, 03:10.01 PM ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் வாழ்த்து தெரிவித்துள்ளார். [மேலும்]
Sponsor
Advertisements
கிளிநொச்சி கணேசபுரத்தில் இரு பெண்கள் படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ளனர்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 07:43.53 PM ]
இலங்கை அரசு தமிழ் மக்களை மீள்குடியேற்றம் என்ற பெயரில் வன்னியில் குடியமர்த்தியுள்ள நிலையில் அங்கு மர்மக்கொலைகள் நடந்தேறி வருகின்றன. [மேலும்]
ஈழத்தில் பிரபாகரன் இல்லாவிட்டாலும் சுதந்திர தாகம் ஓயாது: கோவை மாநாட்டில் மலேசிய துணை முதல்வர் அறிவிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 10:31.30 AM ]
ஈழத்தில் பிரபாகரன் இல்லாவிட்டாலும் சுதந்திர தாகம் ஓயாது. தமிழர்கள் என்றால் ஒதுக்கப்பட்ட சமுதாயம் என்ற நிலை மாற வேண்டும். தமிழன் தன்மானத்தோடு வாழ வேண்டும். இவ்வாறு கோவையில் நடைபெறும்  உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் டாக்டர் பி.ராமசாமி கூறியுள்ளார். [மேலும்]
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் புதல்வர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் திட்டம்?
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 04:26.55 AM ]
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் புதல்வர் விதுர விக்ரமநாயக்க ஆகியோர் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
மகிந்தவுக்கு ரஷ்ய பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளதாம்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 03:51.47 AM ] []
 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரஷ்யாவின் மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. [மேலும்]
இலங்கைக்கு ஆயுதக் கொள்வனவுக்கு 300 மில்லியன் அமெ.டொலர்கள் ரஷ்யா கடனுதவி
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 05:05.56 PM ] []
இலங்கை ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதல் ரஷ்யாவுக்கு மூன்று நாள் விஜயமாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சென்றுள்ளார். [மேலும்]
இலங்கையின் 'சர்வதேச முள்ளிவாய்க்கால்" நடவடிக்கை எப்போது?
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 03:09.51 AM ]
கடந்த ஆறு தசாப்தங்களாக நடைபெற்ற தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தினால் ஏறக்குறைய இரண்டு இலட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டும், நாற்பதாயிரம் மக்களுக்கு மேல் காணாமல் போயும், ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்டோர் ஊனமுற்றும், ஆயிரக்கணக்கில் தமிழ்ப் பெண்கள் இலங்கை அரச படைகளினால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டும், பலகோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் நாசமாக்கப்பட்டுள்ளதாக பல சர்வதேச நிறுவனங்கள் கணிப்பிட்டுள்ளன. [மேலும்]
விளம்பரம்