செய்திகள்
'ஈழம் மௌனத்தின் வலி' புத்தக வெளியீட்டு விழா!
[ சனிக்கிழமை, 14 நவம்பர் 2009, 08:54.55 PM ] []
பேரழிவும் அவநம்பிக்கைகளுமாய் சிதைந்து கிடக்கும் ஈழத்தமிழ் மக்களின் இன்றைய துயர்களை பரந்துபட்ட பொதுமக்கள் வெளிக்கு அன்பு நேயத்தோடு எடுத்துச் சொல்லும் மிக முக்கியமான, தனித்துவமான முயற்சியாய் ''ஈழம்: மௌனத்தின் வலி'' என்ற புத்தகம், சென்னை எழும்பூர் காசா மேஜர் சாலையில் உள்ள டான் போஸ்கோ அரங்கில் சனிக்கிழமை மாலை வெளியிடப்பட்டது. [மேலும்]
ஈழத் தமிழர்கள் அவுஸ்திரேலியாவை நாடுவது ஏன்?
[ சனிக்கிழமை, 14 நவம்பர் 2009, 04:42.04 PM ]
இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள வன்னி வதை முகாம்களில் இருந்து தப்பிக்கும் ஈழத் தமிழர்கள், தமிழ்நாட்டிற்கு செல்ல விடாமல் இலங்கைக் கடற்படை சுட்டு வீழ்த்துவதால் அவர்கள் மறுதிசையில் பயணித்து அவுஸ்திரேலியா போன்ற  நாடுகளில் தஞ்சமடையச் செல்கின்றனர் என்று த அவுஸ்திரேலியன் இதழ் எழுதியுள்ளது. [மேலும்]
சரத் பொன்சேகாவுக்கு பதவி ஓய்வு அனுமதி எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது
[ சனிக்கிழமை, 14 நவம்பர் 2009, 02:53.27 PM ]
கூட்டுப்படை தலைமையதிகாரி, ஜெனரல் சரத் பொன்சேகாவின் பதவி ஓய்வு கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உடனடியாக பதவி ஓய்வு அனுமதியை எழுத்து மூலம் அறிவித்துள்ளார். [மேலும்]
இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் பதவியேற்கவுள்ளார்
[ சனிக்கிழமை, 14 நவம்பர் 2009, 02:40.15 PM ]
இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக ஸ்ரீ அசோக் கே காந்தா என்பவர் நியமிக்கப்படவுள்ளார். [மேலும்]
மகசின் சிறை கைதிகள் ஒப்புதல் வாக்குமூலம் தந்தால் நடவடிக்கை எடுப்பேன்: பிரதி நீதி அமைச்சர் புத்திரசிகாமணி
[ சனிக்கிழமை, 14 நவம்பர் 2009, 01:16.09 PM ]
மகசின் சிறையிலுள்ள தமிழ்க் கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்குமிடையே ஏற்பட்ட கைகலப்பில் தமிழ் கைதிகள் ஏழுபேர் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் குறித்து கைதிகளோ அல்லது அவர்களது உறவினர்களோ எழுத்து மூல ஒப்புதல் வாக்குமூலம் வழங்கினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி நீதி அமைச்சர் புத்திரசிகாமணி தெரிவித்துள்ளார். [மேலும்]
தமிழர்களை மீட்க மறுத்த இந்திய அரசு ராஜபக்சவை மட்டும் காப்பாற்ற துடிப்பது ஏன்? பழ.நெடுமாறன் அறிக்கை
[ சனிக்கிழமை, 14 நவம்பர் 2009, 12:22.16 PM ]
இலங்கையில் தமிழர்களை மீட்க மறுத்த இந்திய அரசு  ராஜபக்சவை மட்டும் காப்பாற்ற துடிப்பது ஏன்? என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கேள்வி எழுப்பியுள்ளார். [மேலும்]
சரத் பொன்சேகாவின் பாதுகாப்பு உடனடியாக அரசினால் குறைக்கப்பட்டுள்ளது
[ சனிக்கிழமை, 14 நவம்பர் 2009, 11:52.48 AM ]
இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியும், கூட்டுப் படைகளின் பிரதானியுமான சரத் பொன்சேகாவிற்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு, அவர் இராஜினாமா கடிதம் கையளித்ததும் உடனடியாக அரசாங்கத்தினால் குறைக்கப்பட்டுள்ளது. [மேலும்]
போலி வாக்குறுதிகளை வழங்காதீர்கள் : ஐ.தே.முன்னணிக்கு மல்வத்த பீடாதிபதி அறிவுரை
[ சனிக்கிழமை, 14 நவம்பர் 2009, 10:22.03 AM ]
மக்களின் நலன்கருதி வேறுபட்ட கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் ஒன்று சேர்ந்திருப்பதை வரவேற்கும் அதேவேளை, பொய் வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றுவதை அரசியல் கட்சிகள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர்களுக்கு ஆசி வழங்கிய கண்டி மல்வத்த பீடாதிபதி திப்பட்டுவாவே சித்தார்த்த ஸ்ரீ சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார். [மேலும்]
(2ம் இணைப்பு)
பிராணாப் முகர்ஜி இலங்கை வருகை: மாலை லக்ஷ்மன் கதிர்காமரின் 4வது நினைவு தின நிகழ்வில் உரையாற்றியுள்ளார்
[ சனிக்கிழமை, 14 நவம்பர் 2009, 10:12.12 AM ]
இந்தியாவின் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி இரண்டுநாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். [மேலும்]
மருத்துவரை படுகொலை செய்த படைவீரருக்கு மரண தண்டனை
[ சனிக்கிழமை, 14 நவம்பர் 2009, 08:08.51 AM ]
ஹம்பாந்தோட்டை பெதிகிரிய வைத்தியசாலையில் கடயைமாற்றிய மருத்துவர் ஒருவரை படுகொலை செய்த இராணுவப் படைவீரர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
பம்பலப்பிட்டி இளைஞர் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏழு பொலிஸ் அதிகாரிகளது பணி இடைநிறுத்தம்
[ சனிக்கிழமை, 14 நவம்பர் 2009, 07:56.27 AM ]
பம்பலப்பிட்டியில் சித்த சுயாதீனமற்ற தமிழ் இளைஞர் ஒருவரை மூர்க்கத்தனமாக படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் ஏழு பொலிஸ் உத்தியோகத்தர்களது பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது. [மேலும்]
அரசாங்கத்தின் நடவடிக்கைகளை மியன்மார் ஜனாதிபதி பாராட்டியுள்ளாராம்
[ சனிக்கிழமை, 14 நவம்பர் 2009, 07:52.43 AM ]
இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர் சர்வாதிகாரி தான் ச்வே பாராட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
எம்மவர்களின் கூற்றுக்கள் காரணமாகவே அமெரிக்க போர்க் குற்றச் செயல்கள் குறித்து விசாரணை நடத்துகிறது கோத்தபாய
[ சனிக்கிழமை, 14 நவம்பர் 2009, 07:47.45 AM ]
எம்மவர்களின் கூற்றுக்கள் காரணமாகவே அமெரிக்கா போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்த முனைப்பு காட்டுவதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். [மேலும்]
கூட்டுப்படைகளின் கட்டளைத் தளபதி பதவிக்கு விமானப்படைத் தளபதியின் பெயர் பரிந்துரை
[ சனிக்கிழமை, 14 நவம்பர் 2009, 07:44.21 AM ]
கூட்டுப்படைகளின் கட்டளைத் தளபதி பதவிக்கு விமானப்படைத் தளபதி ரொசான் குணதிலக்கவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. [மேலும்]
தேர்தல் நடத்துவது குறித்து அமைச்சர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் முரண்பாடு
[ சனிக்கிழமை, 14 நவம்பர் 2009, 07:41.57 AM ]
தேர்தல்களை நடத்துவது தொடர்பில் அமைச்சர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
Sponsor
Advertisements
காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது! - வைகோ கண்டனம்!
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:02.33 PM ]
தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான். [மேலும்]
சுட்டவர் ஒரு அணியிலும், சுடச் சொன்னவர் மறு அணியிலும்: சோக பூமியில் துரோக அரசியல்
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 03:37.01 PM ]
ஈழத்தில் இரக்கமற்ற இரத்தக் கொடுமையை அதிபர் மகிந்த ராஜபக்ஷ நடத்தி முடித்துவிட்டார். அந்த வெற்றிக்கு மகிந்தவின் அரசியல் ஆளுமை காரணமா பொன்சேகாவின் இராணுவ வலிமை முக்கியமா என்ற ஒரு வரிக் கேள்விதான் இன்றைய இலங்கை அரசியல்! இவ்வாறு தமிழத்திலிருந்து வெளிவரும் வார இதழான ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது [மேலும்]
சரணடைந்த புலி உறுப்பினர்கள் பலரின் நிலை என்ன?: ஜோன் ஹோம்ஸிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கேள்வி
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 12:47.40 PM ]
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் உதவி மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான இணைப்பாளர்  ஜோன் ஹோம்ஸை சந்தித்துள்ளனர். இதன் போது படையினரிடம் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட 20 ஆயிரம் புலி உறுப்பினர்களின் நிலைமை என்னவென தமிழ் கூட்டமைப்பினர் ஹோம்ஸிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். [மேலும்]
பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி: ஜெயலலிதா
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:49.54 AM ]
இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கடந்த 17ஆம் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையை விமர்சித்து, பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்]
தமிழ் கூட்டமைப்பு பா.உ. சிவநாதன் கிசோர்,ஜனாதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பு
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:33.25 AM ] []
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். [மேலும்]
தமிழர்களின் தன்னுரிமையினை ஏற்றுக் கொள்ளாத சர்வதேசத்தின் இரட்டை நிலைப்பாடு உணர்த்தி நிற்கும் தேசியத் தலைமையின் இருப்பின் அவசியம்
[ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 03:45.04 PM ]
தலைவன் பிறந்ததனாலும், விடுதலை பயணதத்தில் முதல் வித்து வீழ்ந்ததனாலும் கார்த்திகையே பெருமையடைந்தது. ஈழத்தமிழர்கள் வாழ்க்கையில் மாத்திரமன்றி உலகத் தமிழர்களையும் தாண்டி உலக வல்லரசு நாடுகளை பொறுத்த வரையிலும் அதிக எதிர்பார்ப்பிற்கு உரியதாகவும் முக்கியத்துவம் மிக்கதுமாக ஒவ்வொரு கார்த்திகை மாதமும் அமைந்திருந்தது எவ்வளவிற்கு எவ்வளவு உண்மையோ அவ்வளவிற்கு அவ்வளவு ஏன் அதனைவிட அதிகமாக எதிர்பார்ப்பும் முக்கியத்துவமும் வாய்ந்ததாக அமைந்துள்ளது இந்த கார்த்திகை மாதம். [மேலும்]
விளம்பரம்