செய்திகள்
எதிர்க்கட்சிகளுடன் இரகசியத் தொடர்புகளைப் பேணும் அமைச்சர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 08 நவம்பர் 2009, 05:09.56 AM ]
எதிர்க்கட்சிகளுடன் இரகசியத் தொடர்புகளைப் பேணி வரும் அமைச்சர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக பிரபல சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு சொத்துக்கள் விரைவில் அரசுடமையாக்கப்படும்: பாதுகாப்புச் செயலாளர்
[ ஞாயிற்றுக்கிழமை, 08 நவம்பர் 2009, 05:07.01 AM ]
தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு சொத்துக்கள் விரைவில் அரசுடமையாக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். [மேலும்]
அமெரிக்காவின் விசாரணையை சரத் பொன்சேகா தவிர்த்தது ஏன்?: ஆய்வு சுபத்ரா
[ ஞாயிற்றுக்கிழமை, 08 நவம்பர் 2009, 04:49.58 AM ]
ஜெனரல் சரத் பொன்சேகா போர் நடந்த காலத்தில் மட்டுமன்றி, அதற்குப் பின்னரும் அடிக்கடி பேசப்படும் ஒருவராக மாறிவிட்டார். கடந்த வாரம் முழுவதும் அவர் பற்றிய செய்திகளே ஊடகங்களில் அதிகமாக இடம்பெற்றிருந்தன. [மேலும்]
இடம்பெயர் வன்னி மக்களின் பிரச்சினை குறித்து ஜயலத் எம்.பி. ஜெனீவா, லண்டன் அதிகாரிகளுக்கு விபரிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 08 நவம்பர் 2009, 04:16.56 AM ]
ஜெனீவா மற்றும் லண்டனுக்கு எதிர்க்கட்சித் தலைவரின் விசேட பிரதிநிதியாக இருவார கால விஜயமொன்றை மேற்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன, அங்கு பல்வேறு தரப்புகளையும் சேர்ந்த முக்கியஸ்தர்களை சந்தித்து இலங்கை நிலைவரம் குறித்து விளக்கமளித்துள்ளார். [மேலும்]
ஏறாவூரில் இளம் குடும்பப்பெண் படுகொலை
[ ஞாயிற்றுக்கிழமை, 08 நவம்பர் 2009, 03:55.49 AM ] []
மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் இளம் குடும்பப் பெண்ணொருவர் இனந்தெரியாத நபர்களினால் கழுத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். [மேலும்]
(2ம் இணைப்பு)
தாம் சட்டவிரோத குடியேற்றவாசிகளை கடத்துபவர் அல்ல: இந்தோனேசியா கப்பல் அகதிகள் பேச்சாளர் அலெக்ஸ்
[ ஞாயிற்றுக்கிழமை, 08 நவம்பர் 2009, 03:17.09 AM ]
தாம் சட்டவிரோத குடியேற்றவாசிகளை கடத்துபவர் அல்ல என அலெக்ஸ் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கம் தன்னை ஓர் ஆட்கடத்தும் நபர் எனக் குறிப்பிட்டுள்ளமை நகைப்புக்குரியது என இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 260 சட்டவிரோத குடியேற்றவாசிகளின் பேச்சாளர் அலெக்ஸ் கூறியுள்ளார். [மேலும்]
பொன்சேகாவை பொது வேட்பாளராக களமிறக்குவதற்கு ரணில் சம்மதம்: ஆனால் தமிழ்க் கூட்டமைப்பும் ஜே.வி.பியும் இணங்க வேண்டுமாம்
[ ஞாயிற்றுக்கிழமை, 08 நவம்பர் 2009, 03:01.52 AM ]
மிக விரைவில் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகாவை நிறுத்தும் திட்டத்துக்கு, எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க இணக்கத் தயார் எனக் குறிப்பிட்டுள்ளார். [மேலும்]
யாழ். வலிகாமம் மேற்கில் புதிய இராணுவக் காவலரண்கள்; மக்கள் மத்தியில் அச்ச நிலை
[ ஞாயிற்றுக்கிழமை, 08 நவம்பர் 2009, 02:38.12 AM ]
யாழ். குடாநாட்டில் வலிகாமம் மேற்கின் சில பகுதிகளில் புதிய இராணுவ காவலரண்களும் சிறு முகாம்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் மத்தியில் அச்ச நிலை தோன்றியுள்ளது. [மேலும்]
இராணுவ வெற்றிக்கு அரசியல் தலைமைத்துவமே காரணம் என்கிறார் இராணுவ தளபதி
[ ஞாயிற்றுக்கிழமை, 08 நவம்பர் 2009, 02:14.19 AM ]
அரசியல் தலைமைத்துவமே, வன்னியில் இராணுவ வெற்றிக்கு உதவியது என இலங்கையின் இராணுவ தளபதி, லெப்டினன்ட் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய வலியுறுத்தியுள்ளார்.  [மேலும்]
ஜெனரல் சரத் பொன்சேகா பதவி விலகவுள்ளார்
[ ஞாயிற்றுக்கிழமை, 08 நவம்பர் 2009, 02:09.42 AM ]
இலங்கையின் கூட்டுப்படை தலைமையதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா தனது பதவியிலிருந்து விலகவுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் 10 ஆம் திகதியளவில் இவர்  தமது பதவி விலகலுக்கான இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்புவார்  என எதிர்ப்பார்க்கப்படுகிறது. [மேலும்]
இலங்கையில் அவசரகால சட்டத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு பிரான்ஸ் தூதுவர் கோரிக்கை
[ சனிக்கிழமை, 07 நவம்பர் 2009, 04:53.55 PM ]
மூன்று நாள் விஜயமாக இலங்கை சென்றுள்ள மனித உரிமைகளுக்கான மூத்த பிரான்ஸ் தூதுவர் பிரான்சுவா ஜிமேரி அவர்கள், இலங்கையில் நிலவும் அவசரகாலச் சட்டத்தை இலங்கை அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கேட்டுள்ளார். [மேலும்]
பிரித்தானியாவில் 10 ஆவது வெள்ளிக்கிழமையாக தொடர் கவனயீர்ப்பு போராட்டம்
[ சனிக்கிழமை, 07 நவம்பர் 2009, 04:25.53 PM ] []
இலங்கை அரசாங்கத்தின் திட்டமிட்ட இன அழிப்பில் அகப்பட்டு உயிருடன் தப்பித்த போதும் தங்கள் சொந்த இடங்களில் வாழ முடியாமல்  இலங்கை அரசாங்கத்தின் வதை முகாம்களில் அல்லற்படும் மக்களை விடுவிக்க கோரி 10 ஆவது வெள்ளிக்கிழமையாக பிரித்தானியா தமிழ் இளையோர் அமைப்பினரால் பிரித்தானிய பிரதமர் காரியாலயத்தின் முன்றலில் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. [மேலும்]
யாழில் அனுமதிப்பத்திரம் இன்றி மதுபானசாலை: உரிமையாளருக்கு ரூ. 5 லட்சம் அபராதம்
[ சனிக்கிழமை, 07 நவம்பர் 2009, 01:45.03 PM ]
மதுபானசாலைக்குரிய அனுமதிப்பத்திரம் இன்றி மதுபான விற்பனையில் ஈடுபட்டவருக்கு யாழ். மாவட்ட நீதிமன்றம் ஐந்து லட்சத்துப் பத்தாயிரம் ரூபா அபராதம் விதித்துள்ளது. [மேலும்]
புலிகளுடனான வெற்றியை அரசியல்படுத்த அரசாங்கம் முயற்சி: ஆசிய மனித உரிமைகள் பேரவை
[ சனிக்கிழமை, 07 நவம்பர் 2009, 01:22.58 PM ]
அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போரில் கண்ட வெற்றியை, அரசியல்படுத்தும் நோக்கிலேயே அடுத்து வரும் தேர்தல்களை நடத்தவிருப்பதாக ஆசிய மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது. [மேலும்]
அடைமழை காரணமாக வவுனியா முகாம்களில் மக்கள் அவலம்
[ சனிக்கிழமை, 07 நவம்பர் 2009, 07:58.46 AM ]
தற்போது பெய்து வருகின்ற அடை மழை காரணமாக வவுனியா மனிக்பாம் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்கள் பெரும் அவலங்களை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. [மேலும்]
Sponsor
Advertisements
காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது! - வைகோ கண்டனம்!
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:02.33 PM ]
தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான். [மேலும்]
சுட்டவர் ஒரு அணியிலும், சுடச் சொன்னவர் மறு அணியிலும்: சோக பூமியில் துரோக அரசியல்
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 03:37.01 PM ]
ஈழத்தில் இரக்கமற்ற இரத்தக் கொடுமையை அதிபர் மகிந்த ராஜபக்ஷ நடத்தி முடித்துவிட்டார். அந்த வெற்றிக்கு மகிந்தவின் அரசியல் ஆளுமை காரணமா பொன்சேகாவின் இராணுவ வலிமை முக்கியமா என்ற ஒரு வரிக் கேள்விதான் இன்றைய இலங்கை அரசியல்! இவ்வாறு தமிழத்திலிருந்து வெளிவரும் வார இதழான ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது [மேலும்]
சரணடைந்த புலி உறுப்பினர்கள் பலரின் நிலை என்ன?: ஜோன் ஹோம்ஸிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கேள்வி
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 12:47.40 PM ]
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் உதவி மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான இணைப்பாளர்  ஜோன் ஹோம்ஸை சந்தித்துள்ளனர். இதன் போது படையினரிடம் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட 20 ஆயிரம் புலி உறுப்பினர்களின் நிலைமை என்னவென தமிழ் கூட்டமைப்பினர் ஹோம்ஸிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். [மேலும்]
பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி: ஜெயலலிதா
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:49.54 AM ]
இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கடந்த 17ஆம் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையை விமர்சித்து, பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்]
தமிழ் கூட்டமைப்பு பா.உ. சிவநாதன் கிசோர்,ஜனாதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பு
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:33.25 AM ] []
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். [மேலும்]
தமிழர்களின் தன்னுரிமையினை ஏற்றுக் கொள்ளாத சர்வதேசத்தின் இரட்டை நிலைப்பாடு உணர்த்தி நிற்கும் தேசியத் தலைமையின் இருப்பின் அவசியம்
[ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 03:45.04 PM ]
தலைவன் பிறந்ததனாலும், விடுதலை பயணதத்தில் முதல் வித்து வீழ்ந்ததனாலும் கார்த்திகையே பெருமையடைந்தது. ஈழத்தமிழர்கள் வாழ்க்கையில் மாத்திரமன்றி உலகத் தமிழர்களையும் தாண்டி உலக வல்லரசு நாடுகளை பொறுத்த வரையிலும் அதிக எதிர்பார்ப்பிற்கு உரியதாகவும் முக்கியத்துவம் மிக்கதுமாக ஒவ்வொரு கார்த்திகை மாதமும் அமைந்திருந்தது எவ்வளவிற்கு எவ்வளவு உண்மையோ அவ்வளவிற்கு அவ்வளவு ஏன் அதனைவிட அதிகமாக எதிர்பார்ப்பும் முக்கியத்துவமும் வாய்ந்ததாக அமைந்துள்ளது இந்த கார்த்திகை மாதம். [மேலும்]
விளம்பரம்