இலங்கையில் முதலீடுகளை அதிகரிக்கும் நோக்கில் ஆளுநர் ஹனீப் யூசுப் அமெரிக்க சுற்றுப்பயணம்
இலங்கையில் சர்வதேச முதலீடுகளை அதிகரிக்கும் நோக்குடன் மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் அமெரிக்காவுக்கான சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டுள்ளார்.
சர்வதேச சமூகத்திற்கு இலங்கையின் முதலீட்டுத் திறனை வெளிக்காட்டும் நோக்குடன், மேல் மாகாண ஆளுநரும் வெளிநாட்டு முதலீடுகளுக்கான ஜனாதிபதியின் விசேட தூதருமான ஹனிஃப் யூசுஃப், அமெரிக்காவின் வொஷிங்டன் டி.சி.யில் இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளார்.
முதல் கட்டமாக, அவர் அமெரிக்க வெளியுறவுத் துறையின் (U.S. Department of State)பொருளாதார அபிவிருத்தி, எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கான பிரதிச் செயலாளர் (Under Secretary) ஜேக்கப் ஹெல்பர்க்கை (Jacob Helberg) சந்தித்துள்ளார்.
இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பொருளாதாரப் பங்களிப்பை வலுப்படுத்துவதில் இந்தப் பேச்சுவார்த்தைகள் கவனம் செலுத்தியுள்ளனன.
குறிப்பாக, இலங்கையின் அடுத்தகட்ட பொருளாதார வளர்ச்சிக்கு அமெரிக்க முதலீடு மற்றும் தொழில்நுட்ப உதவியால் பயனடையக்கூடிய துறைமுகங்கள், விநியோகச் சங்கிலிகள்(Logistics), எரிசக்தி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை சார் தரவு மையங்கள் (Data Centres) போன்ற முக்கியத் துறைகளில் இரு தரப்பினரும் கவனம் செலுத்தினர்.
வெளிநாட்டு முதலீடு
2022ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, இலங்கையின் எதிர்காலம் வெளிப்படைத்தன்மை மற்றும் உலகின் மீதான நம்பிக்கையில் தங்கியுள்ளது என்று ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

மேலும்இ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம், மிகவும் வெளிப்படையான, போட்டித்தன்மை வாய்ந்த மற்றும் முதலீட்டிற்கு உகந்த பொருளாதாரத்தை உருவாக்குவதில் உறுதியாக உள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.
கலந்துரையாடலின் போது, இலங்கையில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பில் சாதகமான முறையில் பிரதிசெயலாளர் ஹெல்பர்க் பதிலளித்தார்.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக நலன்கள் மற்றும் பொதுவான விழுமியங்களின் அடிப்படையில் ஒரு வலுவான உறவைக் கட்டியெழுப்பத் தயார்நிலையையும் அவர் வெளிப்படுத்தினார்.
இந்தக் கலந்துரையாடல்களை நடைமுறைக்கு உகந்த மற்றும் பயனுள்ள வகையில் முன்னெடுத்துச் செல்வதற்காகஇ கொழும்புக்கு வருகை தருமாறு பிரதிசெயலாளருக்கு ஆளுநர் ஹனீப் யூசுப் அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக சர்வதேச ஒத்துழைப்பையும் அந்நிய நேரடி முதலீட்டையும் (FDI) ஈர்ப்பதே, வெளிநாட்டு முதலீட்டுக்கான ஜனாதிபதியின் சிறப்புத் தூதர் ஹனிஃப் யூசுப்பின் இந்த சுற்றுப் பயணத்தின் நோக்கமாகும்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஸ்டாலின்-நிரோஷா நடிக்கும் புதிய சீரியல்... வெளிவந்த புரொமோ Cineulagam
சட்டப்படி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு உள்துறை அலுவலகம் கொடுத்துள்ள அதிர்ச்சி News Lankasri