சார்ள்ஸ் அரியகுமார் யசீகரன், 21 வருடங்களுக்கும் மேற்பட்ட ஊடக அனுபவம் கொண்ட ஊடகவியலாளராக அறியப்படுகின்றார். அரசியல், சமூகம் மற்றும் தமிழ்த் தேசியம் சார்ந்த செய்திகளில் புலமை பெற்றவராகவும், வடக்கு - கிழக்குத் தமிழ் சமூகத்துக்கும், தமிழ்த் தேசியத்துக்கும் முன்னுரிமை கொடுத்துப் பணியாற்றும் செய்தியாளராகவும் அவர் திகழ்கின்றார்.
அரசியல் கட்டுரைகள், கவிதைகள் எனப் பன்முகத்தன்மையுடைய எழுத்தாளராகவும் யசீகரன் சமூகத்தில் மதிக்கப்படுகின்றார். நடுநிலைமை கொண்ட அரசியல் கட்டுரைகளுக்கும் விமர்சனங்களுக்கும் பெயர் பெற்ற இவர், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் மற்றும் கொழும்பு இதழியல் கல்லூரியில் ஊடகவியல் கற்கைநெறிகளை முடித்தவர் என்பதோடு, சிறு வயது முதல் கொண்ட ஆர்வத்தினாலும் பேரவாவினாலும் ஊடகத்துறையில் தனது பெயரை நிலைநாட்டியுள்ளார்.