செய்திகள்
ஜனாதிபதித் தேர்தல் சவாலை மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொள்வாரா? :திஸ்ஸ அத்தநாயக்க
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 08:10.54 AM ]
ஜனாதிபதித் தேர்தலை நடாத்தும் சவாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொள்வாரா அல்லது அதிலிருந்து தப்பிச் செல்வாரா என்பதனை உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலளார் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். [மேலும்]
தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்களை பகிர்வதில் இரு குழுக்களுக்கு இடையில் முறுகல் - திவயின
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 08:07.16 AM ]
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு சொந்தமான சர்வதேச சொத்துக்களை பகிர்ந்து கொள்வதில் இரண்டு குழுக்களுக்கு இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
குடும்பப் பெயர்களை ராஜபக்ஷ என மாற்றிக் கொள்வதில் மக்கள் ஆர்வம்
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 08:00.50 AM ]
இலங்கையில் பெரும்பாலானவர்கள் தங்களது குடும்பப் பெயர்களை ராஜபக்ஷ என மாற்றிக் கொள்வதில் நாட்டம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. [மேலும்]
உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறுமாறு ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு உத்தரவு
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 07:57.29 AM ]
ஓய்வு பெற்ற கூட்டுப்படைகளின் கட்டளைத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா இதுவரை தங்கியிருந்த உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
பிரபாகரனின் புகைப்பட அல்பம், ஆயுதங்கள் திருகோணமலையில் மீட்பு
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 03:22.23 AM ]
திருகோணமலை, சேருநுவர பிரதேசத்தில் பொலிஸ் குற்றத்தடுப்பு பிவினரால் மேற்கொள்ளப்பட்ட விஷேட தேடுதல் நடவடிக்கையொன்றின் போது புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்பட அல்பம், செய்மதி உபகரணங்கள் உட்பட ஒரு தொகை ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. [மேலும்]
டென்மார்க் தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிமுக ஒன்றுகூடல் அறிக்கை
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 02:46.27 AM ]
எமது இனத்தின் அரசியல் அபிலாசைகளை எடுத்து கூறுவதற்கு ஒரு ஜனநாயக கட்டமைப்பு அவசியம். அவ்வாறான ஒரு கட்டமைப்பை கட்டியமைக்கும் முயற்சியில் புலம்பெயர் ஈழத்தமிழ் சமுகம் சகல நாடுகளிலும் ஈடுபட்டுவருகின்றது. இது தொடர்பாக டென்மார்க் தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கை [மேலும்]
சர்வதேச மன்னிப்புச்சபையின் ஏற்பாட்டில் "முகாம்களைத் திறந்து விடுங்கள்" தொடர் ஆர்ப்பாட்டம்
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 02:28.03 AM ]
இலங்கையில் அரசினால் நடத்தப்படும் முகாம்களில் தமிழ் அகதிகள் வகை தொகையின்றித் தொடர்ச்சியாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றமையைக் கண்டித்து சர்வதேச மன்னிப்புச்சபை உலகளாவிய ரீதியில் மாபெரும் ஆர்ப்பாட்ட நடவடிக்கை ஒன்றை அடுத்துவரும் ஒருவார காலத்துக்குத் தொடர்ச்சியாக நடத்த தீர்மானித்துள்ளது. [மேலும்]
ஓசியானிக் வைகிங் கப்பலில் இருந்த 78 அகதிகளும் கரை இறங்கினர்: விரைவில் ஆஸி அகதி அந்தஸ்து வழங்கும்
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 02:18.40 AM ]
இந்தோனேஷியாவில் கடலில் தரித்து நிற்கும் "ஓசியானிக் வைகிங்" கப்பலிலிருந்து இலங்கையர்கள் 78 பேரும் வெளியேறி கரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
யாழில் இராணுவ காவலரண்கள் சிமெந்தினால் புனரமைப்பு
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 02:07.31 AM ]
யாழ்.நகரப்பகுதி வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள இராணுவத்தினரின் காவலரண்கள் யாவும் நிரந்தரமாக வைத்திருக்கும் நோக்கில் சிமெந்தினால் புனரமைக்கப்பட்டு வருகின்றன. [மேலும்]
பாதுகாப்பு அனுமதி (கிளியரன்ஸ்) இல்லாமல் சென்ற பயணிகள் படையினரால் திருப்பி அனுப்பப்பட்டனர்
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 01:59.26 AM ]
யாழ்.மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்வதற்கான பயண அனுமதி தேவையில்லை என வடமாகாண ஆளுநர் அறிவித்த நிலையிலும் நேற்று பயணம் மேற்கொள்ளச் சென்ற பயணிகளிடம் படையினர் பாதுகாப்பு அனுமதி கேட்டுத் திருப்பி அனுப்பியதாகத் திரும்பி வந்த மக்கள் பலரும் விசனம் தெரிவித்தனர். [மேலும்]
தப்புத்தாளங்கள் போடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள்!
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 01:41.56 AM ]
விடுதலைப் புலிகளின் இராணுவ பலம் சிதைக்கப்பட்ட பின்னரும் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈழத் தமிழர்களின் அரசியல் போர்க் களத்தை முன் நகர்த்திச் செல்லும் என்றே தமிழர்கள் நம்பியிருந்தனர். அந்த நம்பிக்கை தற்போது சிதைவடைந்தே செல்கின்றது. இவ்வாறு பாரிஸ் ஈழநாடு இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. [மேலும்]
பிரபாகரன் மீது வீண்பழியை சுமத்துகிறார் கலைஞர் : பழ. நெடுமாற‌ன் க‌ண்டன‌ம்
[ புதன்கிழமை, 18 நவம்பர் 2009, 08:08.55 PM ]
விடுதலைப்புலிகள் இயக்கம் குறித்தும் அவ்வியக்கத்தின் தலைவர் பிரபாகரன் குறித்தும் தமிழக முதல்வர் கருணாநிதி நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார். இதுகு‌றி‌த்து இல‌ங்கை‌த் த‌மிழ‌ர் பாதுகா‌ப்பு இய‌க்க‌த்‌தி‌ன் ஒரு‌ங்‌கிணை‌ப்பாள‌ர் பழ. நெடுமாற‌ன் இ‌ன்று ‌அறிக்கை விடுத்துள்ளார். [மேலும்]
இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து ஆறுமாதம் நிறைவு
[ புதன்கிழமை, 18 நவம்பர் 2009, 07:56.49 PM ]
இலங்கையில் முப்பது ஆண்டுகளாக நடைபெற்று வந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்து ஆறு மாதங்கள் ஆகியுள்ள நிலையில் அங்கு இன்னமும் மீள்குடியேற்றப் பணிகள் நிறைவடையவில்லை. [மேலும்]
ஜோன் ஹோம்ஸ் வவுனியா சென்று திரும்பியுள்ளார்
[ புதன்கிழமை, 18 நவம்பர் 2009, 07:51.28 PM ]
ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமானத்துறை பிரதி செயலாளர் ஜோன் ஹோம்ஸ் இன்று வவுனியா செட்டிக்குளம் முகாமுக்கு விஜயம் செய்தார். இதன் போது அவர் மீள்குடியேற்றம் தொடர்பாக தமது திருப்தியை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது [மேலும்]
புத்தளத்தில் மூன்று தமிழர்கள் கைது
[ புதன்கிழமை, 18 நவம்பர் 2009, 07:46.36 PM ]
புத்தளம் பிரதேசத்தில் காவற்துறையினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பின்போது யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூன்று தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
Sponsor
Advertisements
காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது! - வைகோ கண்டனம்!
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:02.33 PM ]
தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான். [மேலும்]
சுட்டவர் ஒரு அணியிலும், சுடச் சொன்னவர் மறு அணியிலும்: சோக பூமியில் துரோக அரசியல்
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 03:37.01 PM ]
ஈழத்தில் இரக்கமற்ற இரத்தக் கொடுமையை அதிபர் மகிந்த ராஜபக்ஷ நடத்தி முடித்துவிட்டார். அந்த வெற்றிக்கு மகிந்தவின் அரசியல் ஆளுமை காரணமா பொன்சேகாவின் இராணுவ வலிமை முக்கியமா என்ற ஒரு வரிக் கேள்விதான் இன்றைய இலங்கை அரசியல்! இவ்வாறு தமிழத்திலிருந்து வெளிவரும் வார இதழான ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது [மேலும்]
சரணடைந்த புலி உறுப்பினர்கள் பலரின் நிலை என்ன?: ஜோன் ஹோம்ஸிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கேள்வி
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 12:47.40 PM ]
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் உதவி மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான இணைப்பாளர்  ஜோன் ஹோம்ஸை சந்தித்துள்ளனர். இதன் போது படையினரிடம் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட 20 ஆயிரம் புலி உறுப்பினர்களின் நிலைமை என்னவென தமிழ் கூட்டமைப்பினர் ஹோம்ஸிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். [மேலும்]
பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி: ஜெயலலிதா
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:49.54 AM ]
இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கடந்த 17ஆம் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையை விமர்சித்து, பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்]
தமிழ் கூட்டமைப்பு பா.உ. சிவநாதன் கிசோர்,ஜனாதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பு
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:33.25 AM ] []
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். [மேலும்]
தமிழர்களின் தன்னுரிமையினை ஏற்றுக் கொள்ளாத சர்வதேசத்தின் இரட்டை நிலைப்பாடு உணர்த்தி நிற்கும் தேசியத் தலைமையின் இருப்பின் அவசியம்
[ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 03:45.04 PM ]
தலைவன் பிறந்ததனாலும், விடுதலை பயணதத்தில் முதல் வித்து வீழ்ந்ததனாலும் கார்த்திகையே பெருமையடைந்தது. ஈழத்தமிழர்கள் வாழ்க்கையில் மாத்திரமன்றி உலகத் தமிழர்களையும் தாண்டி உலக வல்லரசு நாடுகளை பொறுத்த வரையிலும் அதிக எதிர்பார்ப்பிற்கு உரியதாகவும் முக்கியத்துவம் மிக்கதுமாக ஒவ்வொரு கார்த்திகை மாதமும் அமைந்திருந்தது எவ்வளவிற்கு எவ்வளவு உண்மையோ அவ்வளவிற்கு அவ்வளவு ஏன் அதனைவிட அதிகமாக எதிர்பார்ப்பும் முக்கியத்துவமும் வாய்ந்ததாக அமைந்துள்ளது இந்த கார்த்திகை மாதம். [மேலும்]
விளம்பரம்