தனது காணியை முறைகேடாக வேறொருவருக்கு வழங்கிய கோட்டாபய: சீலரத்தன தேரர் அதிரடி அறிக்கை
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது காணியை முறைகேடாக வேறொருவருக்கு வழங்கியதாக ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்லே சீலரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல சீலரத்தன தேரர் மற்றும் ஒரு குழுவினர் இன்று இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு சென்று விஜய்யின் கச்சதீவு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் நரேந்தி மோடிக்கு கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர்.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அருவருப்பாக இருக்கிறது
தொடர்ந்துரையாற்றிய அவர், கோட்டபாயவின் பெயரை கேட்டாலே எனக்கு அருவருப்பாக இருக்கிறது.பத்தரமுல்லையில் அமைந்துள்ள எனக்கு சொந்தமான காணி ஒன்றை மண் போட்டு நிரப்புவதற்காக அன்று ஒரு கடிதம் கொடுத்தேன்.
குறித்த இடத்தில் வீதி செல்லவதால் அதை நிரப்ப முடியாது என்று சொல்லிவிட்டார். அவர் பண்டிதர் போலே செயற்பட்டார்.இன்று அந்த காணி மண்போட்டு நிரப்பப்பட்டு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. எனக்கு முடியாது என்று சொல்லிவிட்டு வேறு ஒருவருக்கு வழங்கிவிட்டார்.
எமது காணியை எமக்கு எடுத்துக்கொள்ள முடியாமல் போய்விட்டது. நான் இதை கோபத்திற்கு சொல்லவில்லை.சிங்கள மக்களுக்கு சேவை செய்ய தான் வந்ததாக கூறினார். ஆனால் அவர்களே அவரை அடித்து விரட்டினர்.
மகிந்த, ரணில் எனக்கு காணி தருவதாக சொன்னார்கள்.நான் வேண்டாம் என்றேன்.எங்களின் காணியை எனக்கு தர மறுத்தவர் கோட்டாபயவை நான் நல்லவர் என சொல்லமாட்டேன்.''என தெரிவித்துள்ளார்.



