முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய செய்தியாளராக இருக்கும் இவர், புகைப்பட ஊடகவியலாளராக பல தேர்ச்சிகளைப் பெற்றவர். சமூகம் சார்ந்த விடயங்களுக்காக அதிக குரல் கொடுத்தவர் மாத்திரமின்றி, பல தாக்குதல்களையும் சந்தித்து ஊடகத்துறைக்கு சிறந்த பங்கினை ஆற்றியிருக்கின்றார். வெளியுலகிற்கு அம்பலப்படுத்த வேண்டிய பல சம்பவங்களை புகைப்படங்களாக, பிரதியெடுத்திருக்கின்றார். குறிப்பாக செம்மணி மனித புதைகுழி தொடர்பான மிக துல்லியமான புகைப்படங்கள் இவருடையவையாகும்.