Switch to
செய்திகள்
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, பொதுத்தேர்தலில் தனித்து போட்டியிடும் சாத்தியம்
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 04:17.15 PM ]
எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, தனித்து போட்டியிடும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
இனியபாரதி சிறுவர்களை படைகளில் இணைப்பதாக வெளியான குற்றச்சாட்டை கருணா மறுத்துள்ளார்
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 04:07.15 PM ]
தமது நெருங்கிய சகாவான, இனியபாரதி சிறுவர்களை படையில் இணைப்பதாக ஐக்கிய நாடுகள் சபை, தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை, தேசிய இன ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துறை அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் மறுத்துள்ளார். [மேலும்]
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் இணையப்போவதில்லை: சிவகீதா
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 03:48.41 PM ]
தாம் தற்போதும்  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கத்தவர் என்ற நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில்  இணையப் போவதில்லை என மட்டக்களப்பு மாநகர மேயர் சிவகீதா பிரபாகரன் தெரிவித்துள்ளார். [மேலும்]
லண்டனில் இலங்கையின் தேசியக்கொடியை எரிக்க முயன்றவர் கைது
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 03:45.38 PM ]
கடந்த 4 ஆம் திகதியன்று, லண்டனில் உள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகரகத்தில் பிரவேசித்து இலங்கையின் தேசியக் கொடியை எரியூட்ட முயன்றமை தொடர்பில் ஒருவரை லண்டன் பொலிஸார் கைது செய்திருப்பதாக இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித்த போகல்லாகம தெரிவித்துள்ளார். [மேலும்]
அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த மற்றுமொரு படகு நடுக்கடலில் மீட்பு
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 03:27.41 PM ]
அவுஸ்திரேலியாவை நோக்கி வந்துகொண்டிருந்த மற்றுமொரு அகதிகள் படகு வழிமறிக்கப்பட்டு கிறிஸ்மஸ் தீவுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன. [மேலும்]
போரின் கொடூரங்களால் எமது மக்களின் எதிர்காலமே கேள்விக்குறி: புதுமாத்தளனுக்கு சென்று திரும்பிய யாழ். ஆயர் கவலை
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 12:32.09 PM ]
யாழ் மறை மாவட்ட ஆயர் வண. தோமஸ் சௌந்தரநாயகம் வன்னியில் இறுதிக் கட்ட யுத்தம் நடைபெற்ற புதுமாத்தளன் பிரதேசத்திற்கு படையினரின் அனுமதியுடன் பயணம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. [மேலும்]
வெளிநாட்டு பிரஜைகள் அரசியல் ஆய்வுகளுக்காக இலங்கைக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்படும்
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 08:24.20 AM ]
வெளிநாட்டு பிரஜைகள் அரசியல் ஆய்வுகளுக்காக இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்படும் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
இராணுவத்திற்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ளும் அரச சார்பற்ற அமைப்புக்கள் தடை செய்யப்படும்: அரசாங்கம்
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 08:22.00 AM ]
இராணுவத்திற்கு எதிராக போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் உள்நாட்டு, வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களை தடை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. [மேலும்]
கருணா மற்றும் பிள்ளையானுக்கும் இடையிலான முறுகல் நிலை உக்கிரம்
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 06:09.08 AM ]
தேச நிர்மாண அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் என்றழைக்கப்படும் கருணாவிற்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானுக்கும் இடையிலான முறுகல் நிலை உக்கிரமடைந்துள்ளதாக லக்பிம பிரதான செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
யாழ்.-காங்கேசன் வீதி விஸ்தரிப்பால் 27 இந்து ஆலயங்கள் அழிவடையும் நிலை: மாற்று நடவடிக்கை எடுக்குமாறு இந்து மாமன்றம் வலியுறுத்து
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 04:18.06 AM ]
யாழ்.காங்கேசன்துறை வீதியை விஸ்தரிக்கும் போது 27 இந்து ஆலயங்களும், பழம்பெரும் கலாசாரச் சின்னங்களும் அழிவடையும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த விடயம் குறித்து யாழ்ப்பாணத்தில் உள்ள நிபுணர்களுடன் ஆராய்ந்து மாற்று ஏற்பாடு செய்யவேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றம் வடமாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. [மேலும்]
யாழில் இந்தியா தூதுவராலயம் திறக்கும் நோக்கம், தமிழர் பண்பாட்டை சிதைத்து, சமுதாய சீரழிவை செயல்படுத்தவே...
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 03:48.29 AM ]
இந்தியா  யாழில் தூதுவராலயம் திறக்கும் நோக்கம் இந்திய உளவுபிரிவான  "றோ" அங்கே அலுவலகம் திறந்து தமிழர் பண்பாட்டை சிதைப்பதற்கும் தேசியத்தில் உள்ள   உள்ள மாணவர்களை  அழித்து யாழில் சமுதாய சீரழிவை   செயல்படுத்தவுமே என புலம்பெயர் தமிழர் சமூக அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. [மேலும்]
யாழ்ப்பாண கோட்டையை புனரமைக்க நெதர்லாந்து அரசாங்கம் நிதியுதவி
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 03:14.19 AM ] []
யாழ்ப்பாணக் கோட்டையை புனரமைக்க நெதர்லாந்து அரசாங்கம், 61.1 மில்லியன் ரூபாய்களை வழங்கியுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. [மேலும்]
இலங்கையில் அவசரகாலச் சட்டம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 02:26.31 AM ]
இலங்கையில் நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்படுவதற்கான பிரேரணை 87 மேலதிக வாக்குகளினால் வெள்ளிக்கிழமையன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. [மேலும்]
இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆடைக்கோட்டா சலுகை ரத்து
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 02:22.56 AM ]
இலங்கைக்கான ஆடை ஏற்றுமதி கோட்டா சலுகையை ரத்துச்செய்ய ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில் உத்தியோகபூர்வ முன்னெடுப்புகள், இந்த மாத இறுதியில் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
சரத் பொன்சேகா, ரஸ்ய முறையிலான இராணுவப் புரட்சிக்கு திட்டமிட்டார்: அரசாங்கம் குற்றச்சாட்டு
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 02:19.47 AM ]
கடந்த ஜனாதிபதி தேர்தலை அடுத்து ரஸ்ய பாணியிலான இராணுவப்புரட்சி ஒன்றுக்கு ஜெனரல் சரத் பொன்சேகா திட்டமிட்டார் என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. [மேலும்]
Sponsor
Advertisements
கிளிநொச்சி கணேசபுரத்தில் இரு பெண்கள் படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ளனர்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 07:43.53 PM ]
இலங்கை அரசு தமிழ் மக்களை மீள்குடியேற்றம் என்ற பெயரில் வன்னியில் குடியமர்த்தியுள்ள நிலையில் அங்கு மர்மக்கொலைகள் நடந்தேறி வருகின்றன. [மேலும்]
ஈழத்தில் பிரபாகரன் இல்லாவிட்டாலும் சுதந்திர தாகம் ஓயாது: கோவை மாநாட்டில் மலேசிய துணை முதல்வர் அறிவிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 10:31.30 AM ]
ஈழத்தில் பிரபாகரன் இல்லாவிட்டாலும் சுதந்திர தாகம் ஓயாது. தமிழர்கள் என்றால் ஒதுக்கப்பட்ட சமுதாயம் என்ற நிலை மாற வேண்டும். தமிழன் தன்மானத்தோடு வாழ வேண்டும். இவ்வாறு கோவையில் நடைபெறும்  உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் டாக்டர் பி.ராமசாமி கூறியுள்ளார். [மேலும்]
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் புதல்வர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் திட்டம்?
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 04:26.55 AM ]
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் புதல்வர் விதுர விக்ரமநாயக்க ஆகியோர் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
மகிந்தவுக்கு ரஷ்ய பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளதாம்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 03:51.47 AM ] []
 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரஷ்யாவின் மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. [மேலும்]
இலங்கைக்கு ஆயுதக் கொள்வனவுக்கு 300 மில்லியன் அமெ.டொலர்கள் ரஷ்யா கடனுதவி
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 05:05.56 PM ] []
இலங்கை ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதல் ரஷ்யாவுக்கு மூன்று நாள் விஜயமாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சென்றுள்ளார். [மேலும்]
இலங்கையின் 'சர்வதேச முள்ளிவாய்க்கால்" நடவடிக்கை எப்போது?
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 03:09.51 AM ]
கடந்த ஆறு தசாப்தங்களாக நடைபெற்ற தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தினால் ஏறக்குறைய இரண்டு இலட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டும், நாற்பதாயிரம் மக்களுக்கு மேல் காணாமல் போயும், ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்டோர் ஊனமுற்றும், ஆயிரக்கணக்கில் தமிழ்ப் பெண்கள் இலங்கை அரச படைகளினால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டும், பலகோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் நாசமாக்கப்பட்டுள்ளதாக பல சர்வதேச நிறுவனங்கள் கணிப்பிட்டுள்ளன. [மேலும்]
விளம்பரம்