சி.டி.விக்ரமரத்ன மரணிப்பதற்கு முன் சந்தித்த பிரபல அரசியல்வாதி! மூன்று மணித்தியாலம் பேசிய விடயம் என்ன..!

Sri Lanka Police Maithripala Sirisena Sri Lanka Politician
By Kanthan Jul 20, 2026 05:13 AM GMT
Report

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன மரணிப்பதற்கு இரு கிழமைகளுக்கு முன் அவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தனது நெருங்கிய நண்பருடன் சந்தித்து இரண்டு, மூன்று மணித்தியாலங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சி.டி.விக்ரமரத்னவின் பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன என்னுடைய மிக நெருங்கிய நண்பர். குறிப்பாக நான் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் தான் அவர் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார்.

அவர் நேர்மையாகவும், நற்குணங்களுடன், அமைதியாகவும், சாந்தமானகவும் பணியாற்றினார்.

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் பூதவுடலுக்கு ரணில் உள்ளிட்ட பிரமுகர்கள் நேரில் அஞ்சலி

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் பூதவுடலுக்கு ரணில் உள்ளிட்ட பிரமுகர்கள் நேரில் அஞ்சலி

சந்தித்து கலந்துரையாடிய விடயஙகள்

அரசியல் கட்சிகளில் ஏற்படும் பிரச்சினைகள், மோதல்கள் மற்றும் சில சமயங்களில் அரசியல் தலைவர்கள் பிளவுபட்டு பல்வேறு விடயங்களை பொலிஸ் மா அதிபரிடம் கொண்டு செல்வார்கள்.

சி.டி.விக்ரமரத்ன மரணிப்பதற்கு முன் சந்தித்த பிரபல அரசியல்வாதி! மூன்று மணித்தியாலம் பேசிய விடயம் என்ன..! | Igp C D Wickramaratne S Death  

ஆனால், அந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவர் யாரையும் கோபத்துக்கு உள்ளாக்கவில்லை என்பதோடு யாரையும் பகைத்துக் கொள்ளவில்லை. அரகலய போராட்டக் காலத்தில் கூட மிக திறமையாக செயற்பட்டவர்.

இந்தச் சம்பவம் நடப்பதற்கு சுமார் இரண்டு, மூன்று வாரங்களுக்கு முன்பு, அவர் எனது மற்றொரு நண்பரான ரங்க கலன்சூரிய மற்றும் சில நண்பர்களுடன் சந்தித்து இரண்டு, மூன்று மணிநேரம் பல விடயங்கள் தொடர்பில் பேசிக் கொண்டிருந்தோம்.

பேச்சுவார்த்தை முடிந்து நான் போகும் போது, "சேர், நான் உங்களுடைய வீட்டுப் பக்கமும் வந்து போக வேண்டும், சும்மா ஒரு கோப்பி குடிப்போம்" என்று கூறினார். எனவே, அவருடைய இந்த மறைவு, இவ்வாறு நடக்கும் என்று என்னால் நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை.

காரணம் என்ன

இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் அவரைச் சந்தித்து பல மணிநேரம் ஒன்றாக இருந்ததால், இந்தச் செய்தியைக் கேட்டதும் எனது மனதை மிக ஆழமாகப் பாதித்ததோடு பெரும் மன வேதனையைத் தந்தது.

சி.டி.விக்ரமரத்ன மரணிப்பதற்கு முன் சந்தித்த பிரபல அரசியல்வாதி! மூன்று மணித்தியாலம் பேசிய விடயம் என்ன..! | Igp C D Wickramaratne S Death

எனவே, இந்தச் சம்பவம் எவ்வாறு நடந்தது, என்ன காரணம் என்று இன்னும் சொல்ல முடியாது. விசாரணைகளின் மூலமே அது தெரியவரும்.

இவரைப் போன்ற முக்கியமான மனிதர்கள் அரச சேவைக்கும், பொலிஸ் துறைக்கும், ஏனைய சேவைகளுக்கும் மிகவும் முன்மாதிரியான ஒருவராவார்.

அவருடைய ஓய்வுக் காலத்தில் கூட அவரால் பணியாற்ற முடியும். 63 வயது என்பது ஒருவரின் சிறந்த அறிவும், முதிர்ச்சியும் அதிகரிக்கும் காலம், நன்றாகப் பணியாற்றக்கூடிய காலம்.

ஆனால், அப்படிப்பட்ட ஒரு தருணத்தில் தான் அவர் நம்மை விட்டுப் பிரிந்துள்ளார். எனவே தனிப்பட்ட முறையிலும், நான் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து மக்களின் சார்பிலும் எனது ஆழ்ந்த இரங்கலையும் துயரத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாளை விடைபெறுகின்றார் சி.டி. விக்ரமரத்ன: முழு பொலிஸ் மரியாதையுடன் இறுதிச் சடங்குகள்

நாளை விடைபெறுகின்றார் சி.டி. விக்ரமரத்ன: முழு பொலிஸ் மரியாதையுடன் இறுதிச் சடங்குகள்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் சர்ச்சைக்குரிய மரணம்..! குடும்பத்தார் வெளியிட்ட தகவல்கள்..

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் சர்ச்சைக்குரிய மரணம்..! குடும்பத்தார் வெளியிட்ட தகவல்கள்..

you may like this video


மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US