Switch to
செய்திகள்
இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரிகள் 12 பேருக்கு கட்டாய ஒய்வு
[ திங்கட்கிழமை, 01 பெப்ரவரி 2010, 02:13.09 PM ]
இலங்கை இராணுவத்தில் பணியாற்றிய உயர் அதிகாரிகள் 12 பேர் கட்டாய ஒய்வில் உடனடியாக அனுப்பப்பட்டுள்ளதாக படை அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர். [மேலும்]
பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி யானை சின்னத்தில் போட்டியிட முடிவு
[ திங்கட்கிழமை, 01 பெப்ரவரி 2010, 02:06.48 PM ]
எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமது கட்சி யானை சின்னத்தில்  போட்டியிட தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணி அறிவித்துள்ளது. [மேலும்]
மாத்தளை பகுதியில் இரண்டு கிளைமோர் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன
[ திங்கட்கிழமை, 01 பெப்ரவரி 2010, 01:55.11 PM ]
மலையகத்தின் மாத்தளை பண்டாரபொல தோட்டத்தில் புதைக்கப்பட்ட நிலையில் இரண்டு பாரிய கிளைமோர் குண்டுகளை மாத்தளை காவல்துறையினர் நேற்று மாலை மீட்டுள்ளனர். [மேலும்]
இலங்கையின் சுதந்திர தின நிகழ்வு இவ்வருடம் கண்டியில்.. பாதுகாப்பு அதிகரிப்பு
[ திங்கட்கிழமை, 01 பெப்ரவரி 2010, 01:48.29 PM ]
இலங்கையின் 62வது சுதந்திர தினக் கொண்டாட்டம் இம்முறை கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகாமையிலுள்ள வளாகத்தில் நடத்தப்படவுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகள்  அனைத்தும் பூர்த்தி அடையும் நிலையில் உள்ளதாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் டி. திசாநாயக்க தெரிவித்தார். [மேலும்]
'லங்கா" செய்தித்தாள் அச்சகத்தின் முத்திரையை அகற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது
[ திங்கட்கிழமை, 01 பெப்ரவரி 2010, 01:34.33 PM ]
'லங்கா"  செய்தித்தாள் அச்சகம் மற்றும் காரியாலயம் என்பனவற்றிற்கு வைக்கப்பட்ட முத்திரையை அகற்றுமாறு நுகேகொட நீதவான் அன்ரகுமார ஹேரத் இன்று உத்தரவிட்டார். [மேலும்]
ஜனாதிபதி பதவிப்பிரமாணம் தொடர்பான விபரங்கள் நீதிமன்றத்தினால் நாளை வெளியிடப்படும்
[ திங்கட்கிழமை, 01 பெப்ரவரி 2010, 01:30.40 PM ]
இரண்டாம் முறையும் தெரிவான ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கான பதவிப் பிரமாணம் செய்வது தொடர்பான விபரங்கள், உச்ச நீதிமன்றத்தினால் நாளை ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படவுள்ளது. [மேலும்]
நாடாளுமன்ற தேர்தலில் டக்ளஸ், வீணை சின்னத்திலேயே போட்டியிடவுள்ளாராம்!
[ திங்கட்கிழமை, 01 பெப்ரவரி 2010, 12:28.49 PM ]
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 9ம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது கட்சியின் வீணைச் சின்னத்திலேயே போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார். [மேலும்]
பிரபாகரனின் இறப்பு சான்றிதழ் கிடைக்கப் பெற்றதாக அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவிப்பு
[ திங்கட்கிழமை, 01 பெப்ரவரி 2010, 12:18.40 PM ]
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரண அத்தாட்சிப் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை இலங்கை அரசு சிபிஐக்கு அனுப்பியுள்ளது என்று இந்திய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார் [மேலும்]
சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டதை நேரில் பார்த்த சிங்கள ஊடகவியலாளர் கைது
[ திங்கட்கிழமை, 01 பெப்ரவரி 2010, 12:11.58 PM ]
சரணடைந்த விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டதை நேரில் பார்த்த சிங்கள ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. [மேலும்]
சரணடைந்த புலி உறுப்பினர்கள் என அரசினால் 56 பேர் பெற்றோரிடம் கையளிப்பு
[ திங்கட்கிழமை, 01 பெப்ரவரி 2010, 12:02.33 PM ]
இரச படையினரிடம் சரணடைந்தவர்கள் எனக் கூறும் அரசாங்கத்தால் புனர்வாழ்வளிக்கப்பட்ட 56 முன்னாள் புலி உறுப்பினர்கள் நேற்று பெற்றேர்களிடம் கையளிக்கப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.  [மேலும்]
யேர்மனியில் நடைபெற்ற கேணல்.கிட்டு மற்றும் வீரத்தமிழன் முத்துக்குமாரனின் வீரவணக்க நிகழ்வு
[ திங்கட்கிழமை, 01 பெப்ரவரி 2010, 11:51.23 AM ] []
 யேர்மன், நொய்ஸ் நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தமிழ் மக்களால் கேணல் கிட்டு மற்றும் தமிழீழ மக்களின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் மாவீரர்களோடு தன்னையும் அர்ப்பணித்து ஒப்பற்ற தியாகத்தை செய்த வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரனுக்கும்  வீரவணக்க நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. [மேலும்]
சிங்கள மக்களுக்கு எதிராக செயற்படுவது தமது நோக்கம் அல்ல: இரா.சம்பந்தன் பா.உ.
[ திங்கட்கிழமை, 01 பெப்ரவரி 2010, 11:38.17 AM ]
சிங்கள மக்களுக்கு எதிராக செயற்படுவது எமது நோக்கம் இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து நடத்திய ஊடக சந்திப்பின் போது கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா. சம்பந்தன் இதனை தெரிவித்துள்ளார். [மேலும்]
அரசின் காலக்கெடுவான ஜனவரி 31 முடிவடைந்தும் இடம்பெயர் மக்கள் முகாம்களில்....
[ திங்கட்கிழமை, 01 பெப்ரவரி 2010, 09:03.07 AM ]
இலங்கையில் விடுதலைப்புலிகளுடான இறுதி யுத்த காலத்தில் வன்னிப் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து  அரசின் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியவர்கள் அனைவரும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் தேதிக்கு முன்னர் தங்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என இலங்கை அரசு அறிவித்திருந்தது. [மேலும்]
சுதந்திர தமிழீழத் தாகத்துடன் டென்மார்க்கில் 04.02.2010 அன்று பாராளுமன்ற திடலை நோக்கிய பேரணி
[ திங்கட்கிழமை, 01 பெப்ரவரி 2010, 08:49.09 AM ]
தமிழினத்தின் இழந்த இறைமையை மீளப்பெற்றிட குரல் கொடுப்பதுடன், தமிழர் நிலத்தை சிங்கள தேசம் வன்பறிப்பு செய்த நாளாம் பெப்ரவரி 4ம் நாளை கரிநாளாக நினைவுகூர்ந்து, டென்மார்க்கில் கொப்பன்காகன் நகரசபை முன்றலில் இருந்து பாராளுமன்றதிடலை நோக்கிய பேரணியில் கலந்துகொண்டு  எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு அழைக்கின்றார்கள். [மேலும்]
நெதர்லாந்தில் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவுவணக்கம்
[ திங்கட்கிழமை, 01 பெப்ரவரி 2010, 08:29.59 AM ]
நெதர்லாந்தில் நேற்று (31.01.2010) வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் 1ம் ஆண்டு நினைவுவணக்கம் "ரொத்தர்டாம்" நகரில் நடைபெற்றது. இதில் முத்துக்குமார் அவர்களின் நிழற்படம் வைக்கப்பட்டு, அகவணக்கம், மலர்வணக்கம் அங்குவந்திருந்த மக்களால் செலுத்தப்பட்டது. [மேலும்]
Sponsor
Advertisements
கிளிநொச்சி கணேசபுரத்தில் இரு பெண்கள் படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ளனர்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 07:43.53 PM ]
இலங்கை அரசு தமிழ் மக்களை மீள்குடியேற்றம் என்ற பெயரில் வன்னியில் குடியமர்த்தியுள்ள நிலையில் அங்கு மர்மக்கொலைகள் நடந்தேறி வருகின்றன. [மேலும்]
ஈழத்தில் பிரபாகரன் இல்லாவிட்டாலும் சுதந்திர தாகம் ஓயாது: கோவை மாநாட்டில் மலேசிய துணை முதல்வர் அறிவிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 10:31.30 AM ]
ஈழத்தில் பிரபாகரன் இல்லாவிட்டாலும் சுதந்திர தாகம் ஓயாது. தமிழர்கள் என்றால் ஒதுக்கப்பட்ட சமுதாயம் என்ற நிலை மாற வேண்டும். தமிழன் தன்மானத்தோடு வாழ வேண்டும். இவ்வாறு கோவையில் நடைபெறும்  உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் டாக்டர் பி.ராமசாமி கூறியுள்ளார். [மேலும்]
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் புதல்வர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் திட்டம்?
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 04:26.55 AM ]
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் புதல்வர் விதுர விக்ரமநாயக்க ஆகியோர் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
மகிந்தவுக்கு ரஷ்ய பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளதாம்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 03:51.47 AM ] []
 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரஷ்யாவின் மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. [மேலும்]
இலங்கைக்கு ஆயுதக் கொள்வனவுக்கு 300 மில்லியன் அமெ.டொலர்கள் ரஷ்யா கடனுதவி
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 05:05.56 PM ] []
இலங்கை ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதல் ரஷ்யாவுக்கு மூன்று நாள் விஜயமாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சென்றுள்ளார். [மேலும்]
இலங்கையின் 'சர்வதேச முள்ளிவாய்க்கால்" நடவடிக்கை எப்போது?
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 03:09.51 AM ]
கடந்த ஆறு தசாப்தங்களாக நடைபெற்ற தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தினால் ஏறக்குறைய இரண்டு இலட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டும், நாற்பதாயிரம் மக்களுக்கு மேல் காணாமல் போயும், ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்டோர் ஊனமுற்றும், ஆயிரக்கணக்கில் தமிழ்ப் பெண்கள் இலங்கை அரச படைகளினால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டும், பலகோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் நாசமாக்கப்பட்டுள்ளதாக பல சர்வதேச நிறுவனங்கள் கணிப்பிட்டுள்ளன. [மேலும்]
விளம்பரம்