பாடசாலை காலத்திலிருந்தே ஊடக ஆர்வமுடையவர் டில்ஷான். அறிவிப்பாளராக சிறந்த அனுபவம் கொண்டவர். உயர்தரத்திற்குப் பின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக கடமையாற்றியுள்ளார்.
எமது தளத்தோடு 5 ஆண்டுகளுக்கும் மேலான ஊடக அனுபவம் கொண்ட இவர் கோவிட், அரகலய, ஆட்சி மாற்றங்கள் உள்ளிட்ட முக்கிய காலங்களில் களத்தில் நின்று பணியாற்றிய ஆளுமைமிக்கவர்.
“News Insight Tamil” நிகழ்ச்சி மூலம் ஊழல் வெளிப்பாடு தொடர்பான தகவல்கள், “நாட்டு நடப்பு” மூலம் உலகத் தமிழர்களுக்கு இலங்கை நடப்புகள் பகிர்வு உள்ளிட்டவற்றை மிகச் சிறப்பாக செய்து வருகின்றார்.
பக்கச்சார்பில்லா பத்திரிகை பண்பு, மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண செயலில் ஈடுபாடு உள்ளிட்டனவும், செய்தி அறிக்கை, அரசியல் பகுப்பாய்வு, மொழிபெயர்ப்பில் நிபுணத்துவம் பெற்றவராகவும் டில்ஷான் திகழ்கின்றார்.