இலங்கை கலைஞர்களுக்காக யாழில் புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம்
இலங்கை கலைஞர்களுக்காக முன்னெடுக்கப்படும் சினிமா செயற்பாடாக யாழ்ப்பாணம் நீர்வேலியில் Dream Line Productions எனும் புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை கடந்த ஜூன் 6ஆம் திகதி முதல் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
DI, Edit, Atmos Sound with Mix Preview Theater, Foly Sounds, Dubbing Thater போன்ற ஒழுங்கமைப்புகளுடன் Post Production Studio வும், திரைப்படங்களை எடுப்பதற்கான நவீன தரத்திலான Arri Alexa கெமரா, Aputure மற்றும் Amaran லைட்ஸ் போன்ற யுனிட் ஒன்றையும் யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக அறிமுகம் செய்துள்ளனர்.
மாபெரும் நிகழ்ச்சி
இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் தென்னிந்தியாவிலிருந்து பருத்திவீரன் திரைப்பட புகழ் இயக்குனர் அமீர், மற்றும் லப்பர் பந்து கதாநாயகிகள் சுவஸ்திகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர் - கதை சொல்லி பாவா செல்லத்துரை, டிராபிக் ராமாசாமி திரைப்பட இயக்குனர் விக்கி, ஆவணப்பட மற்றும் திரைப்பட இயக்குனர் சோமீதரன் போன்றோர் கலந்துக்கொண்டிருந்தனர்.
இவர்கள் மட்டுமில்லாமல் தென்னிலங்கையிலிருந்து கோமாளி கிங்ஸ் திரைப்பட இயக்குனர் கிங் ரட்ணம், இலங்கை சார்க் அமைப்பின் தலைவர் கெளசல்யா குமாரசிங்க, VFX தொழிநுட்ப கலைஞர் சாதா வீரம, திரைப்பட இயக்குனர் சனேஷ் டிசானாயக்க போன்ற இலங்கை முன்னனி திரை கலைஞர்களும் இலங்கை திரைப்பட கூட்டுத்தாபன தலைவர் சுடத் மஹாடிவுலுவேவா மற்றும் சரசவிய ஊடகங்களில் இருந்து ஹேமாலி விஜயரத்ன, நயனாஞ்சலி டேகிபிட்டிய, நிஷங்க விஐயரத்ன, காயன் ரத்னாயக்க போன்றோரும் பங்குபற்றியிருந்தனர்.
யாழ்ப்பாணத்திலே மாபெரும் நிகழ்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட இந்த விழாவில் இந்த வருடத்திற்கான 5 முழு நீளத்திரைப்படங்களை தயாரிப்பதற்கான ஆரம்ப நிகழ்வும் நிடைபெற்றது.
பிரபலங்கள்
லூயிஸ், அந்தோனி, Misson Lanka, சாசுவதம், திரவி போன்ற வரிசையில் திரைப்பட தலைப்புக்களை அறிமுகப்படுத்தி இயக்குனர்கள் கெளரவிக்கப்பட்டிருந்தனர்.
தொடர்ச்சியாக இலங்கையில் ஒரு முக்கியமான திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமாக முன்னேறிவரும் என்பதல்ல சந்தேகம் இல்லை என வந்திருந்த பிரபலங்கள் பலரும் சுட்டிக்காட்டி வாழ்த்தி உரையாற்றியிருந்தனர்.








ஏர் இந்தியா துயர சம்பவம்... ஒரு வாரத்திற்கு முன்பே விமான விபத்தை கணித்த இந்திய ஜோதிடர் News Lankasri
