அரசியல் தலையீடுகளால் குழப்பப்படும் விசாரணைகள்: அச்சத்தில் பாடசாலையின் பழைய மாணவர்கள்

Sri Lankan Tamils Mullaitivu Sri Lanka
By Uky(ஊகி) Jul 01, 2024 11:43 AM GMT
Uky(ஊகி)

Uky(ஊகி)

in சமூகம்
Report
Courtesy: uky(ஊகி)

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய அதிபர் மீதான ஊழல் மோசடிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் புதிய விசாரணைகள் தொடர்பில் பழைய மாணவர்களிடையே அச்சம் நிலவி வருகின்றது.

நீண்ட நாட்களாக தொடர்ந்து வந்த ஊழல் மோசடிகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களின் உண்மைத் தன்மையினை ஆராய்ந்து கொள்ள புதிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த விசாரணைகள் கல்வித்துறை சாராத உயரதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டு வருகிற போதும் அந்த விசாரணைகளும் அரசியல் தலையீடுகளால் குழப்பப்படலாம் என அச்சப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய ஊழல் தொடர்பில் ஆரம்பமான விசாரணை

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய ஊழல் தொடர்பில் ஆரம்பமான விசாரணை

இடைநிறுத்தப்பட்ட விசாரணை 

துணுக்காய் வலயக் கல்விப் பணிமணையினால் மேற்கொள்ளப்பட்டிருந்த விசாரணையின் முடிவுகள் அடிப்படையிலான அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு வடமாகாண கல்வித் திணைக்களம் தயாராகிக்கொண்டிருந்தது.

அரசியல் தலையீடுகளால் ஏற்படுத்தப்பட்ட அழுத்தம் காரணமாக மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுப்பதை வடமாகாண கல்வித் திணைக்களம் கைவிட்டு விட்டதாக பழைய மாணவர் சங்கம் செயலாளர் குறிப்பிட்டிருந்ததும் இங்கே நோக்கத்தக்கது.

அரசியல் தலையீடுகளால் குழப்பப்படும் விசாரணைகள்: அச்சத்தில் பாடசாலையின் பழைய மாணவர்கள் | Investigations Marred By Political Interference

பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் உள்ளிட்ட பாடசாலையின் நலன் சார்ந்து இயங்கும் சமூகத்தினால் உரிய தரப்புக்களிடம் வழங்கி வந்த தொடர்ச்சியான கோரிக்கைகள் காரணமாக கல்விப் புலம் சாராத விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அந்த விசாரணைகள் மூலம் உறுதி செய்யப்படும் குற்றச்சாட்டுக்களுக்காக மோசடியுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

அதிருப்தியளிக்கும் முல்லைத்தீவு - துணுக்காய் பாடசாலை அதிபரின் செயற்பாடு

அதிருப்தியளிக்கும் முல்லைத்தீவு - துணுக்காய் பாடசாலை அதிபரின் செயற்பாடு

குழப்பிய அரசியல் கட்சி 

ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தின் வளர்ச்சி நோக்கிய அதன் எதிர்காலத்தினை பாதிக்க கூடியதாக அமைந்துவிடும் ஊழல் மோசடிகளை தடுத்து நிறுத்துவதோடு மேற்கொண்டு அவ்வாறான ஒரு மோசடி மீண்டும் நடைபெறாது இருப்பதற்காகவே இந்த நடவடிக்கைகளை கோரியிருப்பதாக பாடசாலையின் சமூகம் சார்ந்தோர் இடையே மேற்கொண்ட உரையாடலின் போது அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.

ஆரம்பக்கட்ட வலயக்கல்வி மட்டத்திலான விசாரணைகளின் தொடர் நகர்வினை மாகாண மட்டத்தில் தடுத்து நிறுத்தியது ஒரு அரசியல் கட்சியின் தலையீடே என அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

அரசியல் தலையீடுகளால் குழப்பப்படும் விசாரணைகள்: அச்சத்தில் பாடசாலையின் பழைய மாணவர்கள் | Investigations Marred By Political Interference

தமிழ் தேசியத்தின் மீது அதீத பற்றுறுதியோடு இருப்பதாக காட்டிக்கொள்ளும் அந்த தமிழ் அரசியல் கட்சி தமிழர் நலன் சார்ந்து செயற்படுவதாக முன்னெடுக்கும் அதிகமான நிகழ்வுகளில் குழப்பங்கள் ஏற்படுவதோடு அவை தொடர்பிலும் பரபரப்பான செய்திகள் பரவி வருவதையும் இங்கே சுட்டிக் காட்டலாம்.

உண்மையிலேயே தமிழர் நலன் கருதி செயற்படுவதாக இருந்தால் ஒட்டுசுட்டான் மாகவித்தியாலய அதிபருக்கெதிராக எடுக்கவிருந்த நடவடிக்கைகளை ஏன் அவர்கள் தடுத்து நிறுத்த வேண்டும் என பாடசாலைச் சமூகம் சார்ந்த ஆர்வலர் ஒருவர் கேள்வி எழுப்புவதும் நோக்கத்தக்கது.

ஒட்டுசுட்டான் பாடசாலை விவகாரம்: வடமாகாண நன்னடத்தை பிரிவால் ஆரம்பிக்கப்பட்ட விசாரணை

ஒட்டுசுட்டான் பாடசாலை விவகாரம்: வடமாகாண நன்னடத்தை பிரிவால் ஆரம்பிக்கப்பட்ட விசாரணை

புலம் பெயர் பழைய மாணவர்

புலம் பெயர்ந்து வாழ்ந்து வருபவரும் பாடசாலையின் வளர்ச்சியில் பங்கெடுத்து வருபவருமான ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர் ஒருவர் தன் ஆதங்கத்தினை கீழ்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.

பல பிரிவுகளால் பலதரப்பட்ட வகையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இடைநடுவில் ஐந்து சதத்திற்கும் பெறுமதியற்ற அரசியல்வாதி எவனாவது புகுந்து இந்த விசாரணைகளைப் "புஸ்வாணம்" ஆக்குவானா? என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.

அரசியல் தலையீடுகளால் குழப்பப்படும் விசாரணைகள்: அச்சத்தில் பாடசாலையின் பழைய மாணவர்கள் | Investigations Marred By Political Interference

பாடசாலையின் எதிர்காலத்திற்கும் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கும் வந்த சாபக்கேடு ஒழிந்து ஒரு நல்ல விமோசனம் கிடைக்குமா? என்பதுதான் பலரின் எதிர்பார்ப்புகள். 

கண்ட கண்ட அரசியல்வாதிகளின் வாலைப்பிடித்துக் கொண்டு சமூகத்தில் தன்னை ஒரு செல்வாக்குள்ள ஆளாகக் காட்டிக்கொண்டு திருடுவதை தொழிலாகக் கொண்டுள்ள பல பிரபல திருடர்களுக்கு இந்த விசாரணையானது வயிற்றில் புளியைக் கரைக்க வேண்டும்.

அதற்காக நான் யாரையும் இங்கே திருடர்கள் என்று சொல்லவில்லை. யாரும் திருடாதீர்கள் என்றுதான் சொல்ல வந்தேன்.

ஊழல் செய்தாரை விசாரணைகள் வஞ்சித்து வாழ்வுதனைச் சிதைத்துவிடும்.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் அதிபர் விவகாரம்: வடமாகாண பிரதம செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவு

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் அதிபர் விவகாரம்: வடமாகாண பிரதம செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US