முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் அதிபர் விவகாரம்: வடமாகாண பிரதம செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவு
முல்லைத்தீவு (Mullaitivu) - ஒட்டுசுட்டான் பாடசாலை அதிபரின் நிதி நிர்வாக முறைகேடுகள் தொடர்பாக சுயாதீன விசாரணைக்குழுவை அமைத்து விரிவான அறிக்கை வழங்குமாறு வடமாகாண பிரதம செயலாளர் முல்லைத்தீவு அரசாங்க அதிபரை பணித்துள்ளார்.
குறித்த பாடசாலையில் நிர்வாக நிதி முறைகேடு தொடர்பாக பாடசாலை சமூகத்தினரால் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்துள்ளது.
முறைப்பாடு தொடர்பில் விசாரணை
எனினும், அந்த குற்றச்சாட்டு தொடர்பில் வடமாகாண கல்வி மௌனம் காத்து வந்த நிலையில் வட மாகாண பிரதமர் செயலாளர் மற்றும் முல்லைத்தீவு அரசாங்க அதிபருக்கு குறித்த விடயம் தொடர்பில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை குழு ஒன்றை அமைத்து தனக்கு விரிவான அறிக்கை ஒன்றை வழங்குமாறு வடமாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் உமா மகேஸ்வரனுக்கு எழுத்து மூலமான கடிதத்தை அனுப்பியுள்ளார்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
தமிழின படுகொலையின் கொடூரம்..! முள்ளிவாய்க்கால் மண் தொடர்பில் முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய செய்தி
கொழும்பில் ஏற்பட்ட அமைதியின்மை! முன்னாள் அமைச்சர் விமல் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
தமிழகத்தில் விடுதலைப் புலிகளை பற்றி சர்ச்சைக்குரிய பேச்சு.. நாடு திரும்பியதும் கைது! - அர்ச்சுனா எம்பி பகிரங்கம்
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri