அதிரடியாக 100 F4 போர் விமானங்களை கொள்வனவு செய்யவுள்ள உக்ரைன்
உக்ரைன், பிரான்சின் 100 ரஃபேல் F4 போர் விமானங்களையும், மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகளையும் பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரஷ்ய தாக்குதல்களுக்கு எதிராக தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் கியேவின் திறனை மேம்படுத்துவதற்கான ஒரு பெரிய ஒப்பந்தத்தின் படி இந்நவடிக்கை மேற்கொண்டுள்ளது.
பாரிஸுக்கு அருகிலுள்ள ஒரு விமான தளத்தில் தனது பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுடன் கடிதத்தில் கையெழுத்திட்ட பிறகு, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இந்த நடவடிக்கையை "வரலாற்று சிறப்புமிக்கது" என்று பாராட்டினார்.
முக்கிய கலந்துரையாடல்
ரஃபேல் F4 களின் விநியோகம் 2035 ஆம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது, அதே நேரத்தில் இடைமறிப்பு ட்ரோன்களின் கூட்டு உற்பத்தி இந்த ஆண்டு தொடங்குகிறது.

ஆனால் ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியை ஈர்க்கவும், முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களை அணுகவும் பிரான்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது 27 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டமைப்பைப் பிளவுபடுத்திய சர்ச்சைக்குரிய நடவடிக்கையாகும்.
"இது அடுத்த ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்கு நீடிக்கும் ஒரு மூலோபாய ஒப்பந்தம்" என்று திங்களன்று மக்ரோனுடன் ஒரு கூட்டு மாநாட்டில் ஜெலென்ஸ்கி கூறியிருந்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஹார்முஸ் நீரிணையில் ட்ரம்ப் அறிவித்த 20 சதவீத கட்டணம்., உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடி மாற்றம் News Lankasri
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri