இலங்கையில் எரிபொருள் அதிகரிப்பால் பொருளாதாரத்தில் ஏற்படப்போகும் அபாயம்
டீசல் விலை அதிகரிப்பதால் போக்குவரத்து கட்டணங்கள் உயரும் நிலையில், தேநீர் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் அதிகரிக்கும். இதன் மூலம் நாட்டுக்குள் பெரும் பணவீக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாக வயம்ப பல்கலைக்கழக கணக்கியல் பீட பேராசிரியர் அமின்த் மெத்சில் பெரேரா தெரிவித்துள்ளார்.
எரிபொருட்களுக்கான விலை அதிகரிப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் தட்டுபாடு
இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்கம் மக்களுக்கு தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு எரிபாெருட்களுக்கான விலை அதிகரித்திருக்கிறது. அதேநேரம் எரிபொருட்களின் விலை திருத்தம் மேற்கொள்ளும் போது நாங்கள் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்டுள்ள இணக்கப்பாட்டுக்கு அமைய, விலை சூத்திரத்திற்கமையவே மேற்கொள்ள வேண்டும்.

அதன் பிரகாரம் மாத்தின் ஆரம்பத்திலே இந்த திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பும் எரிபொருட்களுக்கான விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
என்றாலும் தற்போது மாதத்தின் நடுப்பகுதியில் எரிபொருட்களுக்கான விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளதாலே இந்த விலை அதிகரிப்புக்கு காரணம் என அரசாங்கம் தெரிவித்து வருகிறது. உலக சந்தையில் மசகு எண்ணெய் பெரல் ஒன்று 115 டொலர் வரை அதிகரித்திருந்தது.
விலை உயர இதுவே காரணம்
அதனடிப்படையில், இங்கு விலை அதிகரிக்கப்பட்டது. அதேநேரம் தற்போது உலக சந்தையில் 80 முதல் 90 டொலர் வரை பெரல் ஒன்றின் விலை குறைந்துள்ளது.
அதன் பிரகாரம் எரிபொருள் விலை குறைவடைய வேண்டும். அதன் பிரகாரம் அரசாங்கம் தற்போது எரிபொருட்களுக்கு விலை அதிகரிப்பு செய்திருப்பது நியாயமானதா என கேட்கிறோம்.

அத்துடன், ஒரு மாத காலத்துக்கு தேவையான எரிபொருள் கைவசம் இருப்பதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது. அரசாங்கத்தின் கைவசம் இருந்த எரிபொருட்களையே தற்போது அரசாங்கம் விநியோகித்து வருகிறது. அப்படியாயின் கைவசம் இருந்த எரிபொருட்களுக்கு அரசாங்கம் எவ்வாறு விலை அதிகரிப்பு செய்ய முடியும் என கேள்வி எழுகிறது.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை பார்க்கும்போது, கறுப்புக்கடை முதலாளிமார் மேற்கொள்ளும் நடவடிக்கையையே அரசாங்கம் மேற்கொள்கிறது என்ற நியாயமான சந்தேகம் மக்கள் மத்தியில் எழுகிறது என்றார்.
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam