இலங்கையில் நிலவி வரும் நிச்சயமற்ற நிலையும், தமிழர்களுக்கு பாதுகாப்பற்ற தன்மையுமே, தமது நாட்டில் அவர்கள் தஞ்சம் கோருவதற்கான காரணம் என, அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் தெரிவித்துள்ளார். [மேலும்]
வன்னியில் இருந்து வந்து முகாம்களில் தங்கியுள்ள பெண்கள், , அரசாங்க அதிகாரிகளினால் பலவந்தமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக த அவுஸ்திரேலியன் நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது. [மேலும்]
இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது போர் குற்றங்கள் இடம்பெற்றுள்ளமைக்கான சான்றுகள் உள்ளதாகத் தெரிவித்து, அது தொடர்பாக உரிய விசாரணைகளை நடத்தவேண்டும் என அமெரிக்காவை தளமாகக் கொண்ட 6 மனித உரிமைக் குழுக்கள், கோரிக்கை விடுத்துள்ளன. [மேலும்]
"புலிகளின் குரல்" வானொலியின் இணையத்தள ஒலிபரப்பு மீண்டும் ஆரம்பிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் யூலை 5ஆம் நாள் கரும்புலிகள் நினைவு தினத்தன்று இணயத்தள ஒலிபரப்பினை புலம்பெயர் தமிழ் மக்கள் கேட்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
கடந்த சனிக்கிழமை இலங்கை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கடத்தப்பட்ட மட்டக்களப்பை சேர்ந்த நாதன் உட்பட 6 பேர் நேற்று புதன்கிழமை பி.ப.3.45 மணியளவில் விடுவிக்கப்பட்டுள்ளனர். [மேலும்]
எதிர்வரும் 11 ஆம் திகதி எகிப்தில் ஆரம்பமாகும் அணிசேரா இயக்க நாடுகளின் 15 ஆவது உச்சிமாநாடு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் வெளிநாட்டமைச்சர் ரோஹித போகொல்லாகம அடங்கலான உயர்மட்ட தூதுக் குழு எகிப்து செல்லவுள்ளது. [மேலும்]
இலங்கையில் இடம்பெயர் தமிழர்களுக்கு புலம்பெயர் தமிழர்களால் அனுப்பிவைக்கப்பட்ட நிவாரணப்பொருட்களுடன் சர்வதேசக் கடற்பரப்பில் இதுநாள் வரை தத்தளித்துக் கொண்டிருந்த வணங்காமண் கப்பலை நீண்ட இழுபறிக்குப் பின் இன்று சென்னை துறைமுகத்தில் நுழைய துறைமுக அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். [மேலும்]
இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் தெளிவான விசாரணைகளை மேற்கொள்ளும்படி, சர்வதேச பாராளுமன்ற ஒன்றியம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. [மேலும்]
வன்னியில் மக்கள் நீண்ட காலத்திற்கு முகாம்களில் துன்பம் அனுபவிக்க நேர்ந்தால், மற்றுமொரு பிரபாகரன் உருவாகும் சாத்தியம் ஏற்படும் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலர் ரில்வின் சில்வா எச்சரித்துள்ளார். [மேலும்]
இலங்கையில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு ஐக்கிய நாடுகளின் ஊழியர்கள் தொடர்பில் ஆராய்வதற்கு சட்டத்தரணி ஒருவரை இலங்கைக்கு அனுப்பவிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. [மேலும்]
வெளிநாடுகளில் இருந்து தமது நாட்டில் அரசியல் தஞ்சம் கோரி சட்டவிரோதமாக உள்நுழைபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை ஜப்பான் மேற்கொண்டுள்ளது. [மேலும்]
சில வாரங்களுக்கு முன்னர், சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்திச் செல்லப்பட்ட கப்பலில் உள்ள இலங்கையர்கள், தமது உறவினர்களுடன் தொடர்பு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
கிழக்கில் இயங்கி வரும் முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் ஆயுதங்களை களைவதற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு காலம் எதிர்வரும் 4 ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது [மேலும்]
தேசிய பிரச்சினை தொடர்பில் இலங்கை அரசியல் வரலாற்றில் எந்த ஒரு அரச தலைவருமே நேர்மையாக நடந்து கொள்ளவில்லை. எனவே தற்போதைய ஜனாதிபதியும் கடந்த கால அரச தலைவர்களைப்போல் செயற்படாமல் அதிகாரப் பகிர்வு என்ற இடத்தில் அரசாங்கம் இல்லை என்பதை பகிரங்கமாக கூறவேண்டும். இல்லையேல்..... [மேலும்]
அவுஸ்திரேலியாவுக்கு இலங்கையரை சட்ட விரோதமாக கடத்திவரும் நடவடிக்கையில் பிரிட்டனைச் சேர்ந்த ஒருவருக்குத் தொடர்பு இருப்பதாக அவுஸ்திரேலிய பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர். [மேலும்]
இடம்பெயர்ந்த நிலையில் வவுனியா முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களிடம் இந்த முகாம்கள் நிரந்தரமானவையல்ல என அரசு தெரிவித்துள்ளது. டென்மார்க் அகதிகள் கவுன்ஸிலும் ஏனைய அமைப்புகளும் அரசின் இந்த உறுதிமொழியை நிறைவேற்றுமாறும், மீள் குடியேற்றத்தை மிக விரைவில் ஆரம்பிக்குமாறும் கேட்டு வருகின்றன. [மேலும்]
ஜனாதிபதி மஹிந்தவினால் புதிதாக அமைக்கப்படவுள்ள அபிவிருத்திக்கும் இணக்கப்பாட்டுக்குமான அனைத்துக் கட்சிக் குழுக் கூட்டம் இன்று அலரி மாளிகையில் நடைபெறுகிறது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்.ஸ்ரீகாந்தா தலைமையில் கலந்துகொள்கின்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
நாடு கடந்த தமிழீழ அரசை புலம்பெயர்ந்துள்ள மக்கள்தான் தூண்களாக தாங்கி நிற்க வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரச உருவாக்க செயற்குழுவின் தலைவர் விசுவலிங்கம் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். [மேலும்]
தமிழர்களுக்கு சம உரிமை, தமிழ்மொழிக்கு சமதகுதி, தமிழர்களுக்கான அதிகாரபகிர்வு இதற்காக நாம் போராடும் நிலைதான் தற்போது உள்ளது. எனினும் இலங்கையில் நிச்சயம் தமிழர்கள் அரசு அமையும் என்று முதலமைச்சர் கருணாநிதி இன்று சட்டசபையில் கூறியுள்ளார். [மேலும்]
இந்திய அரசுடன் நான் நேரடித் தொடர்பை ஏற்படுத்தவுள்ளேன். ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு ஆதரவு தருமாறு கோரவுள்ளேன். அதேபோல விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை இந்தியா நீக்க வேண்டும் என புலிகள் அமைப்பின் சர்வதேசப் பிரிவு பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் கோரியுள்ளார். [மேலும்]
இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட தமிழ்மக்கள் மரணங்கள் மற்றும் தடுத்து வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக இலங்கை அரசே முதற்கட்டமாக விசாரணை நடத்தவேண்டும் என்றும், அதனை அரசு செய்ய முடியாவிடின் விசாரணை தொடர்பாக எந்தவொரு அங்கத்துவ நாடோ, எந்தவொரு தனி நபரோ.... [மேலும்]
செட்டிகுளத்தில் அமைந்துள்ள ராமனாதபுரம் மற்றும் ஆனந்தகுமாரசாமி முகாம்களைப் பிரிக்கும் முள்கம்பிகளுக்கூடாக, தடுத்து வைத்திருந்தவர்கள் வெளியே செல்வதைத் தடுக்கும் முயற்சியில், ஞாயிறு காலை, சிறிலங்கா இராணுவர்கள் நடாத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் கொலைசெய்யப்பட்டும் மற்றும் 2 பேருக்கு மேற்பட்டோர் காயப்படுத்தப்பட்டும் உள்ளார்கள், என வவுனியாச் செய்திகள் தெரிவிக்கின்றன. [மேலும்]
இந்தியாவிற்கு வந்த சிறிலங்க அரசு குழுவுடன் இந்திய தரப்பு நடத்திய சந்திப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிக்கையும் வெளியிடப்படாத நிலையில் அது குறித்து வெளியான செய்தியின் அடிப்படையில், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலரும், சமூக நீதி தமிழ் தேசத்தின் சிறப்பு ஆசிரியருமான தோழர் தியாகு அவர்கள் இந்திய இணையத்தளம் ஒன்றிற்கு அளித்த நேர்காணல், கேள்வி பதில் வடிவில் வெளியிட்டுள்ளது. [மேலும்]