தாய்வானில் மீண்டும் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்
தாய்வானின் ஹுவாலியன் நகரில் இன்றையதினம் (27.04.2024) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, தாய்வானின் தலைநகர் தைபேயிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னைய நிலநடுக்கம்
இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தால் இதுவரை எந்தவொரு சேதமும் ஏற்படவில்லை என தாய்வான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த மாத தொடக்கத்தில் தாய்வானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 17 பேர் உயிரிழந்ததோடு 1,000இற்கும் மேற்பட்ட பின் அதிர்வுகள் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |