மடு மாதாவை வரவேற்கத் தயாராகி வரும் முல்லைத்தீவு மக்கள்
முல்லைத்தீவு - அளம்பிலில் அமைந்துள்ள அந்தோனியார் தேவாலயத்தில் மடு மாதாவை வரவேற்கும் ஆயத்தப் பணிகளில் அந்தப் பங்கு மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
வீதிகளை சுத்தம் செய்து அழகுபடுத்தி வரும் அவர்கள் புனித அந்தோனியார் ஆலயத்திலும் அலங்கரிப்பு வேலைகளை முடித்துள்ளனர்.
28.04.2014 அன்றைய நாளில் மடு மாதாவின் வருகையை எதிர்பார்த்து உள்ளதாக அளம்பில் பங்கு மக்கள் தெரிவிக்கின்றனர்.
உடுப்புக்குளம் குழந்தையேசு ஆலயம்
உடுப்புக்குளம் குழந்தையேசு ஆலயத்திலும் மடு மாதாவை வரவேற்று ஆசிகள் பெறும் பொருட்டு அப்பங்கு மக்கள் ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

முல்லைத்தீவு கொக்கிளாய் வீதியில் வரவேற்பு வளைவுகளை வைத்து உடுப்புக்குளம் குழந்தையேசு ஆலயம் வரையான வீதியின் இரு பக்கங்களிலும் அழகுபடுத்தி வருகின்றனர்.
சிலாவத்தை அன்னை வேளாங்கன்னி ஆலயத்தின் பங்கு மக்களும் மடுமாதவை வரவேற்கும் வகையில் ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள்JOIN NOW |





ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 17 மணி நேரம் முன்
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
இனிமே இப்படித்தான்.. அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு ஷாக் கொடுத்த தயாரிப்பாளர் சங்கம்! Cineulagam