களுகங்கையில் மாணிக்கக்கல் அகழ்ந்த நபருக்கு ஏற்பட்ட விபரீதம்
ஹொரண (Horana) பிரதேசம், களுகங்கையில் இரத்தினக்கல் அகழ்ந்து கொண்டிருந்த நபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பம் நேற்று (26.04.2024) பிற்பகல் ஏற்பட்டுள்ளதாக ஹொரண பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி நபர் களுகங்கையில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த போது நீரில் மூழ்கியதால், ஆபத்தான நிலையில் ஹொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகள்
அத்துடன், இந்த சம்பவத்தில் ஹொரண, போருவதந்த பகுதியை சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹொரண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |