ஸ்பெயின் - மொராக்கோ போட்டிகள்: ஹோட்டல் கட்டணத்தை உயர்த்தி பொருளாதாரத்தை வளர்க்கும் போர்த்துக்கல்
ஸ்பெயின் - மொராக்கோ நாடுகளுடன் இணைந்து 2030ஆம் ஆண்டு FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடரை நடத்தவுள்ள போர்த்துக்கல், அதற்குள் தனது நாட்டு ஹோட்டல்களின் படுக்கை வசதிகளை 60,000- ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது.
இது அந்நாட்டின் தற்போதைய மொத்த கொள்ளளவில் ஐந்தில் ஒரு பங்காகும் (20%) என்று சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
2030 -ல் உலகக் கிண்ணக் கால்பந்து
உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் மூலம் கிடைக்கும் சர்வதேச கவனத்தைத் தன் சுற்றுலாத்துறையின் நீண்டகால வளர்ச்சிக்காகப் பயன்படுத்த போர்த்துக்கல் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 7% பங்களிப்பை வழங்கும் சுற்றுலாத்துறை, இலட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்புகளையும் வழங்கியுள்ளது.
2030 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு, தொடருந்து சாலை, விமான நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் இதர நகர்ப்புற உள்கட்டமைப்புகளை மேம்படுத்த போர்த்துக்கல் அரசு 190 பில்லியன் திர்ஹம்களை (சுமார் 20 பில்லியன் டொலர்) முதலீடு செய்துள்ளது.
நாட்டு வருமானத்தை பல மடங்கு உயர்த்த நடவடிக்கை
கடந்த நான்கு ஆண்டுகளில் 45,000 படுக்கை வசதிகளைக் கூட்டி, தற்போது போர்த்துக்கல்லில் 3,00,000க்கும் அதிகமான ஹோட்டல் படுக்கை வசதிகள் உள்ளன. கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 20 மில்லியன் (2 கோடி) சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து ஐரோப்பாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக போர்த்துக்கல் பார்க்கப்படுகின்றது.
இதனை 2030க்குள் 26 மில்லியனாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுற்றுலாத்துறை மூலமான வருவாய் 2025ஆம் ஆண்டு, 138 பில்லியன் திர்ஹம்களாக இருந்த நிலையில், 2027ஆம் ஆண்டில் அதனை சாதனை அளவாக 161 பில்லியன் திர்ஹம்களை எட்டும் என அந்நாட்டின் மத்திய வங்கி கணித்துள்ளது.
சீனா, அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடனான விமானப் போக்குவரத்தை அதிகரிப்பதன் மூலம் அடுத்தகட்ட வளர்ச்சியை எட்ட போர்த்துக்கல் திட்டமிட்டுள்ளது.
மேலும், பாரம்பரிய சுற்றுலாத் தலங்களைத் தாண்டி, வரலாற்றுச் சிறப்புமிக்க பிற நகரங்களையும் கலாச்சாரம் மற்றும் வணிகப் பயணங்களுக்கான முக்கிய மையமாக மாற்ற புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.