பாடசாலை வளாகத்தில் பற்றி எரிந்த ஆசிரியரின் கார் - சிசிடிவி கமராவில் சிக்கிய சம்பவம்
ஆசிரியரின் வாகனம் தீப்பிடித்து எரியக் காரணமான தீக்குச்சிகளைப் பற்ற வைத்த எட்டு வயது சிறுவனின் வயதை கருத்திற் கொண்டு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை என சர் ஜொன் கொத்தலாவல கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது, சிறுவன் மீது எந்தவிதக் குற்றச்சாட்டுகளோ அல்லது அழுத்தமோ கொடுக்கப்படாது என வலியுறுத்தியுள்ளதுடன், பாடசாலை அதிகாரிகள் முறையற்ற செல்வாக்கைப் பிரயோகித்ததாக சமூக ஊடகங்களில் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் நிராகரித்துள்ளது.
சி.டி.விக்ரமரத்ன மரணிப்பதற்கு முன் சந்தித்த பிரபல அரசியல்வாதி! மூன்று மணித்தியாலம் பேசிய விடயம் என்ன..!
தீப்பிடித்து எரிந்த கார்
ஜூலை 3 ஆம் திகதி பிற்பகல் 2.55 மணியளவில், பாடசாலை வளாகத்திற்குள் ஆசிரியர் ஒருவரின் வாகனம் தீப்பிடித்து எறிந்துள்ளது. அதன் பின்னர், சிசிடிவி காட்சிகளை பார்த்த போது, எட்டு வயது சிறுவன் ஒருவன், வாகனத்தின் அருகே சுற்றித் திரிந்து ஒரு தீப்பெட்டியை வீசியெறிவது தெரியவந்துள்ளது.

காப்பீட்டு நோக்கங்களுக்காக, ஆசிரியர் குருநாகலை தலைமையக பொலிஸாரிடம் சிசிடிவி காட்சிகள் மற்றும் புகைப்படங்களைச் சமர்ப்பித்து முறைப்பாடு கொடுத்த நிலையில், ஆனால் அதில் சிறுவனின் பெயர் குறிப்பிடவில்லை.
ஆசிரியர், குழந்தையையோ அல்லது பெற்றோரையோ எந்த வகையிலும் வற்புறுத்தவில்லை. அவர் தனது முறைப்பாடுகளில் குழந்தையின் பெயரைக் கூட விரும்பவில்லை.
தாயார் செய்த முறைப்பாடு
இருப்பினும், ஆசிரியருக்கு எதிரான முறைப்பாடுகளில் குழந்தையின் பெயரையும் தாய் சேர்த்திருப்பது வருந்தத்தக்கது.
ஜூலை 4 ஆம் திகதி, குழந்தை தனது பெற்றோருடன் தலைமை ஆசிரியர் மற்றும் பிரதித் தலைமை ஆசிரியர் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டது,
இதன்போது, சிறுவன் பல தீக்குச்சிகளைப் பற்றவைத்து, அதில் ஒன்றை காரின் பம்பரில் வீசியதை அவன் ஒப்புக்கொண்டான். பெற்றோர் இந்தச் செயலை உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் சிறுவனின் தந்தை சேதத்திற்கு இழப்பீடு வழங்குவதாக உறுதியளித்தார். குற்றப் புலனாய்வு அலுவலகத்தைச் (SOCO) சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் ஆய்வு நடத்தி, காரைப் பழுதுபார்ப்பதற்காக எடுத்துச் செல்ல அனுமதியளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, குறித்த சிறுவன் பாடசாலைக்கு தவறாமல் வருகை தருவதாகவும், அவரின் பாதுகாப்பும் உரிமைகளும் பாதுகாக்கப்பட்டு வருவதாக பழைய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
டெங்கு நோயாளிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள புதிய வைரஸ் தொற்று! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
படையெடுப்புக்குத் தயாராகும் அமெரிக்கா... நேருக்கு நேர் போர் என அதிரடியாக அறிவித்த ஈரான் News Lankasri