கடும் கோபத்தில் ரணில் எடுக்கவுள்ள அதிரடி நடவடிக்கை
அரசாங்கம் தொடர்வதற்கு ஆதரவளிக்காவிடில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கவனம் செலுத்தியுள்ளார்.
அமைச்சுப் பதவிகளை வழங்குவதில் அநீதி இழைக்கப்பட்டதாக பொதுஜன பெரமுன கட்சி தலைமைக்கு, ஜனாதிபதி அறிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் கடும் நெருக்கடியில் இருக்கும் வேளையில் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் மக்களின் பணத்தை வீணடிக்க ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சரவை மாற்றம்
இதன்போது மேற்கொள்ளப்பட்ட அமைச்சு மாற்றத்தில் உள்ளடங்களின் மாற்றமே தவிர புதிய பதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அமைச்சுப் பதவிகளை வழங்கி மக்கள் மீது அழுத்தங்களை பிரயோகிக்க தயாரில்லை என அவர் பொதுஜன பெரமுன கட்சியிடம் தெரிவித்துள்ளார்.
கொடைக்கானலில் சக்தி போடும் ரொமான்டிக் பிளான், ஆனால்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியாக நடிக்க ஒரு நாளைக்கு நடிகை VJ பார்வதி வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
கார் பயணத்தை தியாகம் செய்தால் 500 சுவிஸ் ஃப்ராங்குகள்: சுவிட்சர்லாந்தில் ஒரு சோதனை முயற்சி News Lankasri