ஈரானிய உதைப்பந்தாட்ட வீராங்கனைகளை கொலை செய்ய ஆணை பிறப்பிப்பு! காப்பாற்றுமாறு கோரிக்கை
அவுஸ்திரேலியாவுக்கு சென்ற ஈரானின் பெண்கள் உதைப்பந்தாட்ட அணியிலுள்ள 11 பெண்களுக்கும் ஈரானின் ஐஆர்ஜிசி பாதுகாப்பு தரப்பால் உயிர் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாக சர்வேதேச ஊடகங்கள் அறிவித்துள்ளன.
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டியில் தேசிய கீதம் இசைக்கும் போது எதிர்ப்பு தெரிவித்தாகவே குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு புதிய அதியுச்ச தலைவரால் இந்த பெண்களை கொலை செய்யுமாறு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
ஐஆர்ஜிசி பொலிஸாரின் அச்சுறுத்தல்
இந்த பெண்கள் அணி அவுஸ்திரேலியாவுக்கு வரும் போது ஐஆர்ஜிசி பொலிஸின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரும் வந்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த சம்பவத்தையடுத்து ஈரானில் உள்ள ஐஆர்ஜிசி பொலிஸார் குறித்த பெண்கள் 11 பேரையும் தங்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த ஐஆர்ஜிசி The IRGC அதிகாரி போட்டி முடிந்து பெண்கள் பஸ்சில் பயணம் செய்யும் போது இவர்களை அச்சுறுத்தியுள்ளார்.
ஏனைய போட்டிகளில் கலந்து கொள்ள விடாமல் நாட்டுக்கு அழைத்து செல்வதாக கூறியுள்ளார்.அச்சந்தர்ப்பத்தில் சர்வதேச உதவி கோரும் சமிக்ஞைகளில் அந்த பெண்கள் தங்களுக்கு ஆபத்து என தெரிவித்துள்ளனர்.
அதன் பின்னரே இந்த சம்பவம் வெளியில் தெரியவந்துள்ளது.ஆனால் அதற்கு அவுஸ்திரேலிய அரசு மௌனமாக இருந்துள்ளது.
அதன் பின்னர் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஈரானிய பிரஜையான மனித உரிமைகள் செயற்பாட்டார் பேராசிரியர் சுமாயா கானி இப்பெண்களுக்காக முன்னிலையாகியுள்ளார்.
சில பிள்ளைகள் தாங்கள் நாட்டுக்கு செல்ல வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.ஏனென்றால் தங்களின் பொற்றோர்களுக்கு ஏதும் நடக்கலாம் என்ற அச்சத்திலாகும்.
அச்சுறுத்தலை வெளிப்படுத்தி விதம்
அதன் பின்னர் டொனால்ட் ட்ரம்ப் அந்த பெண்களை ஈரானுக்கு அனுப்ப வேண்டாம் தான் பாராமெடுப்பதாக அறிவித்திருந்தார்.
மேலும் அவர்களுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்குவதாகவும் அறிவித்துள்ளார். இந்த நிலையில் ஆசியக் கிண்ணக் காற்பந்துத் தொடரிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து,

ஈரானிய மகளிர் அணியின் ஐந்து உறுப்பினர்களுக்கு அவுஸ்திரேலியாவில் மனிதாபிமான விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக கன்பெரா (government in Canberra) அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியப் பொலிஸாரால் அந்தப் பெண்கள் "பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்" என்று குடிவரவு அமைச்சர் டோனி பர்க் (Tony Burke) தெரிவித்தார்.
அணியின் ஏனைய உறுப்பினர்களும் அந்நாட்டில் தங்குவதற்கு விருப்பமென்றால் தாராளமாகத் தங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
you may like this