மக்களுக்கு ஒழுங்கான சேவை வழங்க தவறும் அமைச்சுக்கள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை
பொதுமக்களுக்கு அமைச்சுக்கள் ஒழுங்கான சேவை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதியின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்மூலம் சில அமைச்சு செயலாளர்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், மக்கள் நலக் கொள்கையை முறையாக நடைமுறைப்படுத்தத் தவறிய சில அமைச்சுச் செயலாளர்கள் நீக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியிடம் முறைப்பாடுகள்
வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டை படிப்படியாக மீளக் கட்டியெழுப்ப அரசாங்கம் எடுத்து வரும் பொருளாதார மற்றும் சமூக நலன்புரி கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவளிக்காத அமைச்சின் செயலாளர்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை மக்களுக்கு உரிய சேவை கிடைக்கவில்லை என பொதுமக்களின் முறைப்பாடுகளை பெற்றுக்கொண்ட அமைச்சின் செயலாளர்கள் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri

பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்த தக் லைஃப்.. இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam

இந்திய ரஃபேல் விமானம் பாகிஸ்தான் வீழ்த்தியதா... முதல் முறையாக பிரெஞ்சு உற்பத்தியாளர் விளக்கம் News Lankasri

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri
