வியாழேந்திரனின் மெய்பாதுகாவலர் தொடர்பில் வெளிவரும் புதிய தகவல்

Srilanka Death Batticalo Viyalendren Tamil Nation Alliance
By Dhayani Jun 24, 2021 07:36 AM GMT
Report

நாட்டில் பொலிஸ் உத்தியோகத்தரொருவர் மற்றொருவருக்கு தன்னிச்சையாக தண்டனை கொடுக்கும் அளவில் எந்தவொரு அதிகாரமும் அரசியல் யாப்பில் தெரிவிக்கப்படவில்லை என ரெலோ அமைப்பின் ஊடக பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மெய்பாதுகாவலர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் எமது ஊடறுப்பு நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மெய்பாதுகாவலர் எந்தவொரு சூழ்நிலையிலும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டிருக்க கூடாது.அப்படியான அழுத்தம் ஏற்பட்டிருப்பின் முழங்கால்களின் கீழ் துப்பாக்கியால் சுட்டிருக்க வேண்டும்.பிரச்சினையை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்திருக்க வேண்டும். அதனை மீறி தலையில் வெடி வைத்துள்ளமை ஜனநாயக விரோத செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது.


இந்த சம்பவம் இலங்கையில் மாத்திரமின்றி சர்வதேச அளவலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயக ரீதியிலான அரசியலில் நம்பிக்கையோடு செயற்பட்டு வரும் அனைத்து அரசியல் தரப்பினருக்கும் இது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த மெய்பாதுகாவலர் தற்பாதுகாப்பு நடவடிக்கைக்காக மேற்கொண்ட துப்பாக்கி சூடு அல்ல. அவை திட்டமிடப்பட்ட கொலை சம்பவம் என்பதில் நாங்கள் உறுதியாகவுள்ளோம். நாட்டில் இவ்வாறு செயற்பட பொலிஸார்,இராணுவத்தினருக்கு எந்த அதிகாரமும் இல்லை.இவ்வாறான சம்பவம் நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலை தூக்க இடமளிக்கின்றதா என்ற சந்தேகம், அச்ச உணர்வும் ஏற்பட்டுள்ளது.

இதற்கு அனைவரும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். மேலும்,இவ்வாறான தவறுகளை ஜனாதிபதியே செய்திருப்பினும் தவறு செய்தால் தட்டி கேட்கும் நிலையிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளது.

எனவே இவ்வாறான செயல்களுக்கு கூட்டமைப்பு தனது கண்டனங்களை வெளியிடும். குறித்த சம்பவம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அறிக்கை விடாமைக்கு எந்த உள்நோக்கமும், மறைமுக செயற்பாடோ,யாரையும் பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனையோ கூட்டமைப்பினருக்கு கிடையாது.

இச்சம்பவம் கொலை என்பது உறுதியாக தெரிகின்றது.இதற்கு அனைத்து அரசியல் தரப்பினரும் கண்டனங்களை வெளியிட வேண்டும். மேலும்,இதன்போது கொல்லப்பட்டவருக்கு நீதியும், கொலை செய்தவருக்கு தண்டனையும் பெற்று கொடுக்க அனைத்து தரப்பும் முழு மூச்சுடன் செயற்பட வேண்டும்.

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் இந்த சம்பவத்திற்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லையென கூறியுள்ளார்.வாய் பேச்சுக்களை நம்புவதை விட இராஜாங்க அமைச்சர் வீட்டின் சிசிடிவி காணொளிகளை பொலிஸாருக்கு வழங்க வேண்டும்.

தற்பாதுகாப்புக்காக உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் ஆயுதங்களை வெளியில் எடுக்க கூடாது.இதனையும் மீறி தன் கையில் துப்பாக்கியை வைத்திருந்தமை கொலைக்கான முன் ஆயத்தமாக இருக்கலாம் என்றும் சந்தேகம் நிலவுகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்....

ஆயிரக்கணக்கானோரின் கண்ணீருக்கு மத்தியில் விடைபெற்றார் பாலசுந்தரம்

வியாழேந்திரனின் வீட்டிற்கு முன் வைத்து தலையிலேயே சுட்டார்கள்

வியாழேந்திரனின் வீட்டிற்கு முன் குடும்பஸ்தரொருவர் சுட்டுக் கொலை! நேரடி சாட்சியம்

வியாழேந்திரனின் வீட்டின் முன் நபரொருவர் சுட்டுக் கொலை - நீதிபதி நேரில் சென்று தீவிர விசாரணை

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்

வியாழேந்திரனின் மெய்பாதுகாவலரின் துப்பாக்கி சூட்டு சம்பவம் - பொலிஸார் வெளியிட்ட தகவல்

வியாழேந்திரனின் வீட்டை முற்றுகையிட்ட மக்கள்! பொலிஸார் குவிப்பு

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டின் முன்னால் ஒருவர் சுட்டுக்கொலை! விசாரணை தீவிரம்







மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US