இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்!
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று மாலை வியாழேந்திரனின் வீட்டுக்கு அருகில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், அப்பகுதியில் பெருமளவானோர் ஒன்றுகூடி குறித்த துப்பாக்கி சூட்டிற்கு எதிராக கோசங்களை எழுப்பி வருகின்றனர்.
இதன் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலை நிலவி வருகின்றதுடன்,பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் பொலிஸ் மெய்பாதுகாவலர் ஒருவரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில்,இதில் படுகாயமடைந்த நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.