வியாழேந்திரனின் வீட்டிற்கு முன் குடும்பஸ்தரொருவர் சுட்டுக் கொலை! நேரடி சாட்சியம்
மட்டக்களப்பில் நபரொருவர், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலரது துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி குடும்பஸ்தரொருவர் உயிரிழந்த சம்பவம் நேற்றைய தினம் பதிவாகியிருந்தது.
வியாழேந்திரனின் வீட்டிற்கு முன் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் நண்பரொருவர் ஸ்தலத்தில் என்ன நடந்தது என்பது தொடர்பான நேரடி சாட்சியத்தை வழங்கியுள்ளார்.
இதன்போது குறித்த மெய்ப்பாதுகாவலருக்கும், உயிரிழந்த நபருக்கும் இடையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் பிரச்சினையொன்று ஏற்பட்டிருந்ததாகவும் எனினும் இது தொடர்பில் தனக்கு தெரியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி இன்று காலை நேரில் சென்று முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.