நியூசிலாந்தில் சுட்டுக் கொல்லப்பட்ட காத்தான்குடி நபரின் தாயார் வெளியிட்டுள்ள தகவல்கள்
நியூசிலாந்தில் தாக்குதல் நடத்திய நிலையில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி பலியான காத்தான்குடியை சேர்ந்த நபரின் தாயாரிடம் நேற்று முன் தினம் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் காத்தான்குடியைச் சேர்ந்த 31 வயதுடைய முகமது சம்சூதீன் ஆதில் என்ற குறித்த நபரின் தாயாரான இஸ்மாயில் பரீதா சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இதன்படி,
2016 இல் எனது மகன் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றவேளை பல மாடிக்கட்டடத்தில் விழுந்து விபத்திற்குள்ளானார். அவருக்கு அவ்வேளை உதவுவதற்கு எவரும் இருக்கவில்லை.
சிரியா, ஈராக்கை சேர்ந்த அயலவர்களே அவருக்கு உதவினார்கள். அவர்கள் அவரை மூளைச்சலவை செய்திருக்க வேண்டும். அதன் பின்னர் அவர் முகநூலில் பதிவிட தொடங்கினார்.
வெளிநாட்டிற்கு சென்ற பின்னரே அவர் மாறினார். அவர் இணையத்தில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதை 2016இல் பொலிஸார் கண்டுபிடித்தனர்.
அடுத்த வருடம் அவர் அவுக்லாந்தில் விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். அவர் தீவிரவாத அமைப்புடன் இணைந்து கொள்வதற்காக சிரியா செல்ல முயன்றார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். 2017 இல் கைது செய்யப்பட்ட பின் அவர் எங்களுடன் பேசுவதை குறைத்துக் கொண்டார்.
மூன்று மாதத்திற்கு ஒரு முறை அவர் எங்களுடன் பேசுவார். எனது இரு மகன்களும் அவரை ஏசினார்கள் என குறித்த நபரின் தாயார் தகவல் வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தொடர்புடைய செய்தி...
நியூசிலாந்தில் இலங்கையர் தீவிரவாத தாக்குதல்! - இலங்கை அரசின் அறிவிப்பு வெளியானது
நியூசிலாந்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட இலங்கையர் - குடியுரிமை பெற்றமை தொடர்பில் சர்ச்சை
நியூசிலாந்து தாக்குதலுக்கு காத்தான்குடி பள்ளிவாயல்கள் சம்மேளனம் கண்டனம்
இலங்கையரின் தீவிரவாத தாக்குதலால் நியூசிலாந்தில் கடுமையாக்கப்படும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்கள்

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்... கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க Cineulagam

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan
