அஸ்வெசும பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட இலட்சக்கணக்கான குடும்பங்கள்
அஸ்வெசும பட்டியலில் இடம்பெற்றிருந்த சுமார் 4 இலட்சத்து 25 ஆயிரம் குடும்பங்கள் இன்று (30) முதல் பட்டியலிலிருந்து நீக்கப்படுவதாக கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து தற்காலிக வறுமை நிலைக்கு தள்ளப்பட்ட குடும்பங்களே இவ்வாறு பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீக்கப்பட்ட விளிம்புநிலை குழுவினர்
'விளிம்புநிலை குழுவினர்' என வகைப்படுத்தப்பட்ட குடும்பங்களே இவ்வாறு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் இக்குடும்பங்களை அஸ்வெசும பட்டியலில் இருந்து நீக்கத் தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், 'டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்த நிலைமையை கருத்தில் கொண்டு, மேலும் ஆறு மாத காலம் பட்டியலில் நீடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 4 இலட்சத்து 25 ஆயிரம் குடும்பங்கள் இன்று (30) முதல் பட்டியலிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வழங்கப்படும் உதவித்தொகை
அஸ்வெசும பட்டியலில் இருந்த 'இடைநிலை' பிரிவைச் சேர்ந்த சுமார் 4 இலட்சம் குடும்பங்கள் ஏற்கனவே இந்த பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

இதன்படி, மிகவும் ஏழ்மையான மற்றும் வறுமை கோட்டு பிரிவுகளை சேர்ந்த 10 இலட்சம் குடும்பங்கள் மட்டுமே தற்போது நிவாரணப் பட்டியல்களில் எஞ்சியுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
அவர்களில் வறிய குடும்பங்களுக்கு 17,500 ரூபாயும், ஏழை குடும்பங்களுக்கு 10,000 ரூபாயும் உதவித்தொகையாக வழங்கப்படுகின்றது.
சுரேஸ் சலேவுக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு - அடுத்த சில நாட்களில் வெளியாகவுள்ள புதிய மருத்துவ அறிக்கை