ஜனாதிபதி ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரிடம் இருந்து அச்சுறுத்தல் குறித்து முறைப்பாடு
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் புகைப்படக் கலைஞர் ஒருவர், தனக்கு, ஜனாதிபதி ஊடகபிரிவின் முன்னாள் பணிப்பாளர் நாயகத்திடம் இருந்து அச்சுறுத்தல் தொலைபேசி அழைப்புகள் வருவதாக முறையிட்டுள்ளார்.
இந்த முறைப்பாட்டையடுத்து, கொழும்பின் புறநகர்-கஹதுடுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
முன்னதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவில் இருந்து ட்ரோன் கமரா உள்ளிட்ட பல பொருட்கள் காணாமல் போனதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
உள்ளக கணக்காய்வு
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்றதன் பின்னர், மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது காணாமல் போன உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக விசாரணை நடத்த உள்ளக கணக்காய்வும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, காணாமல் போன உபகரணங்கள் தொடர்பான தகவல்களை தாமே அதிகாரிகளுக்கு வழங்குவதாக கூறி, முன்னாள் பணிப்பாளர் நாயகத்திடம் இருந்து, தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக, புகைப்படக் கலைஞர் முறையிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri