வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! உயிரிழந்தவர்களின் சடலங்களுடன் தயார் நிலையில் சிறப்பு விமானம்
புதிய இணைப்பு
இலங்கையின் தெற்கு கடல் எல்லைக்கு அருகே அமெரிக்க கடற்படையினரால் தாக்கப்பட்ட 'IRIS DENA' கப்பலில் உயிரிழந்த 84 ஈரானிய கடற்றொழிலாளர்களின் உடல்கள் இன்று (13) ஈரானுக்கு அனுப்பப்படும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்தள சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று (13) உடல்களை ஏற்றிச் செல்லும் சிறப்பு விமானம் ஈரானுக்குப் புறப்படத் தயாராக இருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் உள்ள ஈரானிய தூதரகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் இறந்த கடற்றொழிலாளர்களின் உடல்கள் அனுப்பப்படுகின்றன.
முதலாம் இணைப்பு
இலங்கையின் தெற்கு கடல் எல்லைக்கு அருகே ஈரானின் ஐஆர்ஐஎஸ் தேனா என்ற ஈரானின் போர்க்கப்பல், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கி அழிக்கப்பட்ட சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை இன்று நாட்டிற்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
காலி தேசிய வைத்தியசாலையில், இரண்டு குளிர் அறைகளில் வைக்கப்பட்டுள்ள 84 ஈரானிய கடற்றொழிலாளர்களின் உடல்களை ஈரானிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு, காலி தலைமை நீதவானால் உத்தரவிடப்பட்டிருந்தது.
இலங்கை கடற்பரப்பில் வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! உயிரிழந்தவர்களின் சடலங்கள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
சொந்த நாட்டிற்கு கொண்டு செல்லப்படும் சடலங்கள்
காலி தேசிய வைத்தியசாலையில் இரண்டு குளிர் பெட்டிகளில் சேமிக்கப்பட்டிருந்த 45 உடல்கள் தற்போது மத்தள விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், உயிரிழந்த மற்ற ஈரானிய கடற்றொழிலாளர்களின் உடல்களும் அவர்களின் நாட்டிற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
ஈரானிய தூதரகத்திடம் உடல்களை ஒப்படைக்க காலி தலைமை நீதவான் சமீர தொடங்கொட பிறப்பித்த உத்தரவின்படி இந்த உடல்கள் இன்று விமானம் மூலம் கொண்டு வரப்படுகின்றன.
ஐரிஸ் தேனா கப்பல் கடந்த 4 ஆம் திகதி காலியில் இருந்து 19 கடல் மைல் தொலைவில் சர்வதேச கடல் பகுதியில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலின் டார்பிடோ தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்டது.
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல் இயக்குநரின் அடுத்த புதிய சீரியல்.. தலைப்பு என்ன தெரியுமா? Cineulagam
பச்ச குழந்தை விஜய்க்கு என்ன தெரியும்? 40 வயது த்ரிஷா தான் தவறு... தாறுமாறாக கலாய்த்த மருத்துவர்! Manithan