மத்திய கிழக்கு பதற்றத்தினால் உச்சம்தொட்ட எரிபொருள் விலை! அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு
ஈரான் போர் காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில், அதனைத் தணிக்க அமெரிக்கா ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
கடலில் தேங்கியுள்ள ரஷ்ய எண்ணெயை கொள்முதல் செய்ய 30 நாட்கள் கால அவகாசம் அளித்து அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்க நிதித்துறை அனுமதி
மார்ச் 12 ஆம் திகதி நிலவரப்படி கடலில் கப்பல்களில் ஏற்றப்பட்டுள்ள ரஷ்ய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை ஏப்ரல் 11-ஆம் திகதி வரை விற்பனை செய்ய அமெரிக்க நிதித்துறை அனுமதி அளித்துள்ளது.

ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களால் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டொலரைத் தாண்டியுள்ளது.
இந்த விலையேற்றத்தால் அமெரிக்கத் நுகர்வோர் மற்றும் வணிகங்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க டொனால்ட் ட்ரம்ப் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
அமெரிக்காவின் மூலோபாய இருப்பு
அமெரிக்காவின் மூலோபாய இருப்பிலிருந்து (Strategic Petroleum Reserve) 172 மில்லியன் பேரல் எண்ணெய் விடுவிக்கப்பட உள்ளது.
வளைகுடா பிராந்தியத்தில் பயணிக்கும் கப்பல்களுக்கு அமெரிக்க கடற்படை பாதுகாப்பு வழங்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

கப்பல் போக்குவரத்தை எளிதாக்க 'ஜோன்ஸ் சட்டத்தில்' (Jones Act) தளர்வுகளைக் கொண்டு வரவும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.
ரஷ்ய எண்ணெய் மீதான இந்த தளர்வு உக்ரைன் போருக்காக ரஷ்யாவிற்கு நிதி கிடைப்பதற்குக் காரணமாகிவிடும் என ஐரோப்பிய ஒன்றியம் கவலை தெரிவித்துள்ளது.
இருப்பினும், இது மிக குறுகிய காலத்தளர்வு மட்டுமே என்றும், இதன் மூலம் ரஷியாவிற்குப் பெரிய அளவில் லாபம் கிடைக்காது என்றும் அமெரிக்கா விளக்கமளித்துள்ளது.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 18 நிமிடங்கள் முன்
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri