ஈரான் USS ஆபிரகாம் லிங்கனைத் தாக்கியதா..! குற்றச்சாட்டை மறுக்கும் அமெரிக்கா - அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் போர்களம்
ஈரானின் Islamic Revolutionary Guard Corps (IRGC) கடற்படை, தாங்கள் ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணைகள் அமெரிக்காவின் விமானம் தாங்கி செல்லும் போர்க்கப்பல் USS Abraham Lincoln மீது தாக்கி அதை செயலிழக்கச் செய்து, வளைகுடா நீர்ப்பரப்பிலிருந்து பின்வாங்கச் செய்ததாகக் தெரிவித்துள்ளது.
ஆனால் அமெரிக்கா இந்தக் குற்றச்சாட்டை மறுத்து, அந்தப் போர்க்கப்பல் தொடர்ந்து Operation Epic Fury நடவடிக்கையை ஆதரித்து செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
போர்க்கப்பல்கள்
பெப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக மிகப்பெரிய வான்வழி தாக்குதலை ஆரம்பித்ததையடுத்து, அமெரிக்கா மத்திய கிழக்கிற்கு இரண்டு விமானம் தாங்கி செல்லும் போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளது.
USS Gerald R. Ford,USS Abraham Lincoln எனும் இரண்டு கப்பல்களே அவை.

ஒரு ஈரானிய கப்பல் அமெரிக்க விமானம் தாங்கி செல்லும் போர்க்கப்பலுக்கு மிகவும் அருகில் வந்ததாகவும், அதற்கு அமெரிக்க படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அந்தக் கப்பல் தாக்கப்பட்டது என உறுதியாகத் தெரியவில்லை என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஈரானின் புனித நபி மைய தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில், மேம்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை பயன்படுத்திய துல்லியமான நடவடிக்கையில் USS Abraham Lincoln போர்க்கப்பல் ஈரானின் கடல் எல்லையிலிருந்து சுமார் 340 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Sea of Oman பகுதியில் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா மறுப்பு
ஈரான் அரசுத் தொலைக்காட்சி தெரிவித்ததாவது, தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்க போர்க்கப்பலும் அதனுடன் இருந்த தாக்குதல் குழுவும் “அதிவேகமாக அந்தப் பகுதியை விட்டு விலகிச் சென்றதாக” காணப்பட்டதாகும்.
எனினும், இந்தக் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் கூடுதல் தகவல்கள் அரசுத் தொலைக்காட்சியால் வழங்கப்படவில்லை. இதற்கு முன்பும் Islamic Revolutionary Guard Corps இந்தக் கப்பலை தாக்கியதாகக் கூறியிருந்தது.
The Abraham Lincoln Carrier Strike Group continues to support Operation Epic Fury and project power from the sea. pic.twitter.com/2o7krBUp70
— U.S. Central Command (@CENTCOM) March 12, 2026
ஆனால் அப்போது அமெரிக்க பென்டகன் தெரிவித்ததாவது, ஏவப்பட்ட ஏவுகணைகள் அந்தக் கப்பலுக்கு அருகிலும் வரவில்லை என்று. ஈரானின் தகவல்கள் வெளிவந்த உடனே அமெரிக்கா அதை மறுத்தது.
அமெரிக்க United States Central Command (CENTCOM) வெளியிட்ட புகைப்படத்தில் USS Abraham Lincoln போர்க்கப்பல் தொடர்ந்து Operation Epic Fury நடவடிக்கையை ஆதரித்து கடலில் செயல்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்
CBS News வெளியிட்ட தகவலின்படி, அமெரிக்க கடற்படை கப்பல் ஒன்று ஈரானிய கப்பலை நோக்கி 5-inch 54-calibre Mark 45 என்ற தானியங்கி கடற்படை பீரங்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்த முயன்றதாக கூறப்படுகிறது.

இந்தத் துப்பாக்கிச் சூடு எந்தக் கப்பலில் இருந்து நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. மேலும் அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்ட தகவலின்படி, அமெரிக்க தாக்குதல்கள் பல முறை ஈரானிய கப்பலைத் தவறவிட்டதாக கூறப்படுகிறது.
அவை எச்சரிக்கைத் துப்பாக்கிச் சூடுகளா அல்லது தாக்குதல் நோக்கத்திலானவையா என்பது இன்னும் உறுதியாகவில்லை.
மேலும் USS Spruance மற்றும் USS Michael Murphy உள்ளிட்ட இரண்டு destroyer கப்பல்கள் USS Abraham Lincoln உடன் இணைந்து Arabian Sea பகுதியில் செயல்பட்டு வருகின்றன.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 25 நிமிடங்கள் முன்
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri