வெப்பமடையும் இந்திய பெருங்கடல்: இலங்கைக்கு உச்ச நெருக்கடி
இலங்கையில் காலிமுகத்திடல் போராட்டங்களுக்கு அமெரிக்காவும் மேற்கு நாடுகளும்பின்னணியில் இருந்ததாக குறிப்பாக அமெரிக்க உளவு நிறுவனமான சீஐஏ இருந்ததாக எழுப்பப்பட்ட சந்தேகங்கள் குறித்து ஞாயிறு ஆங்கில செய்தித்தாள் ஒன்று ஆசிரியர் தலையங்கத்தை வெளியிட்டுள்ளது.
உக்ரைனில் ரஷ்ய ஆதரவு ஜனாதிபதிக்கு எதிராக வெகு காலத்திற்கு முன்னர் நடந்த வெகுஜன எதிர்ப்புகளின் பின்னணியில் இந்த நாடுகளே இருந்தன. இப்போது அங்கு ஒரு முழுமையான போருக்கு வழியேற்படுத்தப்பட்டுள்ளது.
உக்ரைனில் மக்கள் எழுச்சியில் தனது பங்கை வகித்த அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர், மார்ச் மாதம் இலங்கைக்கு வந்ததும், காலி முகத்திடலில் போராட்டம் ஏப்ரலில் தொடங்கியதும் தற்செயல் நிகழ்வு தான்.
கோட்டாபய ராஜபக்சவின் வெளியேற்றத்தை விரும்பிய மேற்குலகம்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வெளியேற்றத்தை அமெரிக்காவும் மேற்குலகம்விரும்பின என்பதும் இரகசியமான இரகசியமல்ல என்று ஆங்கில இதழ் தமது ஆசிரியர்தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.அப்படியானால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் அவர்களுக்கு என்ன பகை, அல்லது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதை அவர்கள் அங்கீகரிக்கவில்லையா? என்று கேள்வியை ஆங்கில இதழ் தொடுத்துள்ளது.
மேற்கத்திய நாடுகள் எதுவும் புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்துச் செய்திகளை அனுப்பவில்லை. ஆரம்பகால நலம் விரும்பிகள் சீனாவின் ஜி ஜின்பிங், ரஷ்யாவின் விளாடிமிர் புடின் மற்றும் பெலாரஸின் அலெக்சாண்டர் லுகாஷென்கோ ஆகியோர் வாழ்த்துக்களை அனுப்பியுள்ளனர்.
இந்தியாவின் நரேந்திர மோடி செய்தி அனுப்ப ஒரு வாரம் எடுத்தார் என்பதையும் அது சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கு நடுவே ஜனாதிபதியின் மேசையில் சூடான விடயம் ஒன்று விழுந்துள்ளது.
மேற்கத்திய முகாமிலும் - இந்தியாவிலும் படபடப்பை ஏற்படுத்தியுள்ள விடயம்
சீன 'விஞ்ஞான ஆராய்ச்சி' கப்பல் இரண்டு வாரங்களுக்குள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைய உள்ளது. கப்பல் வருவதற்கு ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அனுமதி வழங்கியுள்ளார்.
இலங்கைக்கு வழங்கிய கடன்களை இலக்காகக் கொண்டு அமெரிக்காவினால் சீனாவைத் தாக்குவது, கூடுதல் வேகத்தை எடுத்துள்ளது.
அமெரிக்க கொள்கையின் எதிரொலி
சர்வதேச நாணய நிதியமும், அமெரிக்காவின் கொள்கையை எதிரொலிக்கிறது. இலங்கையின் பாரிய கடனாளியான சீனாவின் கடன்களை இலங்கை மறுசீரமைக்கவேண்டும் என்று அது கோரியுள்ளது.
ஒட்டுமொத்தமாக, தற்போதைய நெருக்கடியும், இலங்கையின் வெளியுறவுக் கொள்கையும்
முன்னெப்போதும் இல்லாத வகையில் இலங்கைக்கு எதிராக ஒன்றிணைந்துள்ளன என்றும்
ஆங்கில இதழ் தமது ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 15 மணி நேரம் முன்

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

கணவன் உடலை டிரம்மில் வைத்து அடைத்த நிலையில்.., மணமக்களுக்கு பிளாஸ்டிக் டிரம் பரிசளித்த நண்பர்கள் News Lankasri
