நுவரெலியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் விபத்து
நுவரெலியா - பதுளை பிரதான வீதியில், கிரகரி வாவி அருகே வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து நேற்று(15.01.2026) பிற்பகல் 3:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விசாரணை
வெலிமடையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கிப் பயணித்த வேன் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகி எதிர்த்திசையில் பயணித்த மற்றுமொரு வேன் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என்றும் இரண்டு வேன்களும் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த விபத்து நடந்த சந்தர்ப்பத்தில் வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில், நுவரெலியா பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 2 நாட்கள் முன்
இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் உலகப்போர்க்கால குண்டுகள்: 5,000 பேர் வெளியேற்றம் News Lankasri
மீண்டும் வந்த கதிர், ஞானம்.. அதிர்ச்சியில் ஜனனி மற்றும் பெண்கள்.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்.. Cineulagam