நுவரெலியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் விபத்து
நுவரெலியா - பதுளை பிரதான வீதியில், கிரகரி வாவி அருகே வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து நேற்று(15.01.2026) பிற்பகல் 3:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விசாரணை
வெலிமடையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கிப் பயணித்த வேன் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகி எதிர்த்திசையில் பயணித்த மற்றுமொரு வேன் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என்றும் இரண்டு வேன்களும் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த விபத்து நடந்த சந்தர்ப்பத்தில் வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில், நுவரெலியா பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


மீண்டும் பிளாக்பஸ்டர் இயக்குநருடன் இணையும் அஜித்.. இதற்காகதான் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் Cineulagam
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri