ஈரான் - இஸ்ரேல் மோதல்: மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நடவடிக்கை
ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பிறகு, மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றத்தை தனிக்க கவனம் செலுத்தி வருவதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லியாட் ஆஸ்டின் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் உடன் ஆஸ்டின் நடத்திய பேச்சுவார்த்தையின்போதே இதனை அவர் கூறியுள்ளார்.
மேலும், அமெரிக்க இராணுவம் தொடர்ந்து பிராந்தியத்தில் மேம்பட்ட இருப்பைக் கொண்டிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வீரர்கள்
மேலும், “ஈரான் ஆதரவு தாக்குதல் அமைப்புகளின் அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்கும் வகையில், அமெரிக்க வீரர்கள் , இஸ்ரேல் மற்றும் பிராந்தியம் முழுவதும் உள்ள பங்காளிகளைப் பாதுகாக்க மேம்பட்ட படை நிலைப்பாட்டை பராமரிப்பார்கள்.

இந்த பதற்ற நிலையை அமெரிக்கா மேம்படுத்துவதை தடுக்கும் முயற்சிகளை மேற்கொள்ளும்’’ என லியாட் ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல், ஈரானின் இராணுவ தளங்களைத் மாத்திரம் தாக்கியமைக்கும், எரிசக்தி உள்கட்டமைப்பை குறிவைக்காமைக்கும் அமெரிக்க அழுத்தம் காரணமாக இருக்கலாம் என சில கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam