இஸ்ரேலின் தீவிர தாக்குதல்: ஈரான் வெளியிட்ட அறிக்கை
இஸ்ரேலின் வான்வெளி தாக்குதல்களளை தனது வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக எதிர்கொண்டதாக ஈரான் அறிவித்துள்ளது.
ஈரானின் - தெஹ்ரான், குசெஸ்தான் மற்றும் இலாம் மாகாணங்களில் உள்ள இராணுவ இலக்குகளை இஸ்ரேல் தாக்கியதாக ஈரானிய வான் பாதுகாப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுப்பதாக கூறி, சனிக்கிழமை அதிகாலை ஈரானில் உள்ள இராணுவ தளங்களை இஸ்ரேல் தாக்கியிருந்தது.
ஈரானிய தகவல்கள்
இந்நிலையில், தாக்குதல் ஆரம்பித்து சில மணிநேரங்களுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் அதன் தாக்குதல்களை நிறுத்தியதாக ஈரானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஒக்டோபர் 1ஆம் திகதியன்று இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, தற்காப்புக்காக ஈரானிலுள்ள இராணுவ இலக்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இஸ்ரேல் இராணுவம் தனது இலக்கை எட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார் அந்நாட்டின் இராணுவ தரப்புகள் தெரிவிக்கின்றன.
மேலும், ஈரான் அரசு புதிய தாக்குதல்களை நடத்தி மோதல்களைப் பெரிதாக்க வேண்டுமென்று நினைத்தால் இஸ்ரேல் அதற்கு பதிலடி தர நேரிடும் எனவும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
