செங்கடலில் ஹவுதி அமைப்பினருக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா
ஏமனில் உள்ள ஹவுதி பயங்கரவாதிகள் முகாம் மீது அமெரிக்க விமானங்கள் குண்டு வீசி வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கப்பல்களை தாக்க ஹவுதி வைத்துள்ள 4 ஏவுகணை அமைப்புகளை அழிப்பதற்கு குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
செங்கடல் பகுதியில் அமெரிக்க சரக்குக் கப்பல் மீது ஹவுதி ஏவுகணை வீசித்தாக்கியதைத் தொடர்ந்து இந்த பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதேவேளை ஈரானில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ஆயுதங்களின் படங்களை அமெரிக்க இராணுவம் இணையத்தில் பகிர்ந்துள்ளது. அந்த ஆயுதங்கள் ஒரு படகிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பொருளாதார சிக்கல்
ஈரானிலிருந்து அவை ஏமனில் இயங்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு அனுப்பப்பட்டதாகச் தெரிவிக்கப்படுகிறது.
செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துகின்றன. இதனால் பெரும்பாலன வணிக கப்பல்களின் போக்குவரத்து இடைநடுவில் நிறுத்தப்படுகின்றன.
அண்மையில் இந்த ஹவுதி அமைப்பினரின் விவகாரத்திற்கு ஒரு முடிவு கொண்டு வரப்படாவிட்டால் இறக்குமதி நாடுகளில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
you may like this,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சன் டிவியில் 3 சீரியல்களின் சங்கமம் நடக்கப்போகிறது... எந்தெந்த தொடர்கள் தெரியுமா, ரசிகர்களுக்கு குட் நியூஸ் Cineulagam

ஈஸ்வரி குறித்து கொற்றவையிடம் தர்ஷினி கூறிய உண்மை, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

இந்தியா-ரஷ்யா புதிய ஒப்பந்தம்: ரயில்வே, அலுமினியம், சுரங்க தொழில்நுட்பங்களில் கூட்டு முயற்சி News Lankasri

வெளிவந்த மனோகரின் சதி, அப்பாவை தள்ளிவிட்ட கொதித்தெழுந்த நிலா, தரமான சம்பவம்.. அய்யனார் துணை பரபரப்பு எபிசோட் Cineulagam
