இராணுவ முகாமில் துப்பாக்கி திருடிய இருவர் கைது!
ஹோமாகம, பனாகொட இராணுவ முகாமில் துப்பாக்கி திருடிய குற்றச்சாட்டில் இரண்டு இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் பனாகொடை இராணுவ முகாமின் பிடிபன பிரதேச காவலரனில் இருந்து சிப்பாய் ஒருவரின் டீ-56 ரக துப்பாக்கி மற்றும் அதற்கான 120 தோட்டாக்கள் என்பனவும் திருடப்பட்டிருந்தது.
இருவர் கைது

இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸ் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் தொடர்பான விசாரணைப் பிரிவினர் காணாமல் போன துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை ஹோமாகம பிரதேசத்தில் வைத்துக் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தற்போதைக்கு முகாமில் கடமையாற்றும் சார்ஜண்ட் தர சிப்பாய் ஒருவரும் துப்பாக்கியுடன் தப்பிச் சென்று முன்னாள் சிப்பாயும் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri