இராணுவ முகாமில் துப்பாக்கி திருடிய இருவர் கைது!
ஹோமாகம, பனாகொட இராணுவ முகாமில் துப்பாக்கி திருடிய குற்றச்சாட்டில் இரண்டு இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் பனாகொடை இராணுவ முகாமின் பிடிபன பிரதேச காவலரனில் இருந்து சிப்பாய் ஒருவரின் டீ-56 ரக துப்பாக்கி மற்றும் அதற்கான 120 தோட்டாக்கள் என்பனவும் திருடப்பட்டிருந்தது.
இருவர் கைது

இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸ் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் தொடர்பான விசாரணைப் பிரிவினர் காணாமல் போன துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை ஹோமாகம பிரதேசத்தில் வைத்துக் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தற்போதைக்கு முகாமில் கடமையாற்றும் சார்ஜண்ட் தர சிப்பாய் ஒருவரும் துப்பாக்கியுடன் தப்பிச் சென்று முன்னாள் சிப்பாயும் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam
வயது உண்மை தெரிந்ததும் சரவணன் எடுத்த அதிரடி முடிவு, கதறி புலம்பும் மயிலு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
வெண்ணிலா சொன்ன விஷயத்தை கேட்டு கடும் ஷாக்கில் கண்மணி, என்ன முடிவு எடுப்பார்.. அன்புடன் கண்மணி புரொமோ Cineulagam