இராணுவ முகாமில் துப்பாக்கி திருடிய இருவர் கைது!
ஹோமாகம, பனாகொட இராணுவ முகாமில் துப்பாக்கி திருடிய குற்றச்சாட்டில் இரண்டு இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் பனாகொடை இராணுவ முகாமின் பிடிபன பிரதேச காவலரனில் இருந்து சிப்பாய் ஒருவரின் டீ-56 ரக துப்பாக்கி மற்றும் அதற்கான 120 தோட்டாக்கள் என்பனவும் திருடப்பட்டிருந்தது.
இருவர் கைது
இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸ் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் தொடர்பான விசாரணைப் பிரிவினர் காணாமல் போன துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை ஹோமாகம பிரதேசத்தில் வைத்துக் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தற்போதைக்கு முகாமில் கடமையாற்றும் சார்ஜண்ட் தர சிப்பாய் ஒருவரும் துப்பாக்கியுடன் தப்பிச் சென்று முன்னாள் சிப்பாயும் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 2 நாட்கள் முன்

ரோலெக்ஸ் சூர்யாவை தூக்கி சாப்பிடும் அளவிற்கு லியோ படத்தில் களமிறங்கும் கேமியோ.. யார் நடிக்கிறார் தெரியுமா Cineulagam

மகனின் உயிர் பிரிந்த நேரத்தில் மருத்துவ ஊழியர்களின் அருவருப்பான செயல்., பெற்றோர் வேதனை News Lankasri

நேட்டோவில் இணைந்தால்.., இந்த இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை News Lankasri
