தமிழர் பகுதிகளில் 43ஆவது தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு
நாடு முழுவதும் திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தின் மீது 1983ஆம் ஆண்டு, கட்டவிழ்த்து விடப்பட்ட தமிழ் இனப் படுகொலை நினைவேந்தல் வாரத்தின் வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட போராளிகளையும் பல்லாயிரக் கணக்கான பொது மக்களையும் நினைவு கூரும் வகையில் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
43ஆம் ஆண்டு தமிழ் தேசிய வீரர்கள் தின நினைவேந்தல் நிகழ்வு இன்று(26.07.2026) தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் ஏற்பாட்டில் மன்னாரில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
நினைவேந்தல் அனுஷ்டிப்பு
இந்த நிகழ்வு, கட்சியின் மாவட்ட பொறுப்பாளரும், மன்னார் நகர முதல்வருமான டானியல் வசந்தன் தலைமையில் இடம்பெற்றுள்ளதுடன், உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இதன்போது குட்டிமணி, தங்கத்துரை உள்ளடங்களாக 53 அரசியல் கைதிகளுக்கும்,பொது மக்களுக்குமான நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.


