நாட்டிற்கு மீண்டும் எரிபொருள் கிடைப்பதில் பெரும் சிக்கல்! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

Fuel Price In Sri Lanka Ceylon Petroleum Corporation Sri Lanka Fuel Crisis
By Dhayani Mar 17, 2026 01:31 PM GMT
Report

புதிய இணைப்பு

கியூஆர் (QR) முறையை மீறி எரிபொருள் வழங்கும் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் மீது சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும், அவற்றின் உரிமங்கள் இடைநீக்கம் செய்யப்படும் என்றும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ராஜகருண தெரிவித்துள்ளார்.

மேலும், இதுபோன்ற எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் குறித்து பொதுமக்கள் பொலிஸாருக்கோ அல்லது எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கோ தவறாமல் தகவல் அளிக்க வேண்டும் என்றும் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அரச ஊழியர்களுக்கு புதன்கிழமைகளில் விடுமுறை! சற்றுமுன்னர் வெளியான சுற்றறிக்கை

அரச ஊழியர்களுக்கு புதன்கிழமைகளில் விடுமுறை! சற்றுமுன்னர் வெளியான சுற்றறிக்கை

எரிபொருள் கிடைப்பதில் ஆபத்து

இதற்கிடையில், கச்சா எண்ணெய் கப்பல் ஒன்று உறுதி செய்யப்படும் வரை நாட்டிற்கு எரிபொருள் கிடைப்பதில் சிக்கல் உள்ளதாகவும் டி. ஜே. ராஜகருண மேலும் கூறியுள்ளார்.

இந்த நிலைமையை கட்டுப்படுத்தவே கியூஆர் (QR) குறியீட்டின் பயன்பாடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும்,யாராவது எரிபொருள் பதுக்கலில் ஈடுபட்டால் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டிற்கு மீண்டும் எரிபொருள் கிடைப்பதில் பெரும் சிக்கல்! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை | Srilanka Fuel Qr Coad Issue Announcement

இதனை அவதானிக்க இன்று முதல் பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், தற்போது கியூஆர் குறியீடுகளில் மாத்திரமே எரிபொருள் வழங்கப்படுவதாகவும், நேற்று இருந்த தொழில்நுட்பச் சிக்கல்கள் அனைத்தும் சரிசெய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

மேலும், கியூஆர் குறியீடுகளை வேறு எங்கும் பயன்படுத்தினால், உடனடியாக அந்த விவரங்களை எரிபொருள் நிறுவனத்திற்கோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ தகவல் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வான்பரப்பை அவசரமாக மூடிய ஐக்கிய அரபு இராஜ்ஜியம்! நடுவானில் சுட்டுவீழ்த்தப்படும் ட்ரோன்கள்

வான்பரப்பை அவசரமாக மூடிய ஐக்கிய அரபு இராஜ்ஜியம்! நடுவானில் சுட்டுவீழ்த்தப்படும் ட்ரோன்கள்

இரண்டாம் இணைப்பு

இதேவேளை, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த சனிக்கிழமை இரவுடன் முடிவடைந்து, ஞாயிற்றுக்கிழமை புதுப்பிக்கப்படும் எனவும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத் தலைவர் டி. ஜெ. ராஜகருண தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், கியூஆர் குறியீட்டு முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் நாட்டின் எண்ணெய் நுகர்வு 20% குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தினசரி டீசல் நுகர்வு 4,800 மெட்ரிக் டொன்களாகவும், பெட்ரோல் நுகர்வு 4,045 மெட்ரிக் டொன்களாகவும் உள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் வரிசைகளை அகற்றும் நோக்கத்தில் கியூஆர் குறியீட்டு முறை நாட்டில் திடீரென அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், அடுத்த மாதத்திற்குள் உறுதிசெய்யப்பட்ட எண்ணெய் இருப்பு போதுமானதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

முதலாம் இணைப்பு 

மத்திய கிழக்கு போர் சூழல் காரணமாக மக்கள் தேவையற்ற முறையில் பீதியடைந்து எரிபொருளைப் பதுக்கி வைத்ததன் விளைவாக திடீரென  'QR ' (தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டு) முறையை மீண்டும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ஏ. எஸ். டி ராஜகருண தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிலவும் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் ஊடக சந்திப்பில், விளக்கமளிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

QR குறியீட்டை பதிவு செய்ய முடியாதவர்களுக்கு தீர்வு! அரசாங்கத்தின் அறிவிப்பு வெளியானது

QR குறியீட்டை பதிவு செய்ய முடியாதவர்களுக்கு தீர்வு! அரசாங்கத்தின் அறிவிப்பு வெளியானது

எரிபொருள் நுகர்வு அதிகரிப்பு

கடந்த சில நாட்களில் எரிபொருள் நுகர்வு சுமார் 20 சதவீதம் திடீரென அதிகரித்தது. இதுவே கியூஆர் (QR) முறையைத் திடீரென அறிமுகப்படுத்தக் காரணம்.

நாட்டிற்கு மீண்டும் எரிபொருள் கிடைப்பதில் பெரும் சிக்கல்! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை | Srilanka Fuel Qr Coad Issue Announcement

57,000 மெட்ரிக் டொன் டீசலும் 47,000 மெட்ரிக் டொன் பெட்ரோலும் விடுவிக்கப்பட்டன. ஒன்பது நாட்களில், இந்த எரிபொருளின் அளவு இரண்டு கப்பல் சுமைக்குச் சமமாக இருந்தது," என்று விளக்கமளித்துள்ளார்.

தற்போதைய உலகளாவிய அரசியல் சூழலை எதிர்கொண்டு, நாட்டில் ஏற்படக்கூடிய எரிபொருள் வரிசைகளைக் கட்டுப்படுத்தவும், முறையற்ற எரிபொருள் பதுக்கலைத் தடுக்கவும், இதுபோன்ற காரணங்களுக்காகவே 'கியூஆர்முறையை மீண்டும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

பொதுமக்கள் தேவையற்ற அச்சத்திற்கு உள்ளாக வேண்டாம்

எனவே பொதுமக்கள் தேவையற்ற அச்சத்திற்கு உள்ளாக வேண்டாம். சாதாரண நுகர்வோர் மற்றும் எரிபொருள் கடத்தல்காரர்களின் செயல்பாடுகள் கவனிக்கப்பட்டதால், வரிசைகளைக் கட்டுப்படுத்தவும் எரிபொருளைச் சேமிக்கவும் 14ஆம் திகதி நள்ளிரவு முதல் கியூஆர் (QR) முறையைச் செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

நாட்டிற்கு மீண்டும் எரிபொருள் கிடைப்பதில் பெரும் சிக்கல்! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை | Srilanka Fuel Qr Coad Issue Announcement

15ஆம் திகதி காலையில் கியூஆர் அமைப்பு மற்றும் இணையதளத்தில் மேற்கொள்ளப்பட்ட மேம்படுத்தல்கள் காரணமாக சிறிய தொழில்நுட்பச் சிக்கல்கள் இருந்தபோதிலும், அனைத்தும் சரிசெய்யப்பட்டு, அமைப்பு மீண்டும் சீரமைக்கப்பட்டுள்ளது.

உலகின் பல நாடுகளில் எரிபொருள் விலை அதிகரித்து, வரிசைகள் உருவாகியுள்ளன. எனவே இலங்கையில் நிலைமையைச் சமாளிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்.

மேலும், தேவையற்ற பயணங்களைக் குறைத்து, தங்களுக்கு தேவையான அளவு எரிபொருளை மட்டும் பெறுவதன் மூலம் இந்த நெருக்கடியைச் சமாளிக்க மக்கள் உதவ வேண்டும் என்றும் அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

தாமதமாகும் எரிபொருள் கப்பல்கள்! சிங்கள-தமிழ் புத்தாண்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் மாற்றம்

தாமதமாகும் எரிபொருள் கப்பல்கள்! சிங்கள-தமிழ் புத்தாண்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் மாற்றம்

வான்பரப்பை அவசரமாக மூடிய ஐக்கிய அரபு இராஜ்ஜியம்! நடுவானில் சுட்டுவீழ்த்தப்படும் ட்ரோன்கள்

வான்பரப்பை அவசரமாக மூடிய ஐக்கிய அரபு இராஜ்ஜியம்! நடுவானில் சுட்டுவீழ்த்தப்படும் ட்ரோன்கள்


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, இணுவில், கனடா, Canada

07 Jul, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US