QR குறியீட்டை பதிவு செய்ய முடியாதவர்களுக்கு தீர்வு! அரசாங்கத்தின் அறிவிப்பு வெளியானது
புதிய இணைப்பு
எரிபொருள் QR அமைப்பில் நிலவிய தொழில்நுட்ப சிக்கல்கள் தீர்க்கப்பட்டு 5.1 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன அறிவித்துள்ளார்.
இந்த அமைப்பின் 95% தொழில்நுட்பச் சிக்கல்கள் தீர்க்கப்பட்டு, பயனர்களுக்குத் தடையற்ற அணுகல் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
இன்று காலை 9 மணிக்கிடையிலான நிலவரப்படி, இதற்கு முன்னர் பதிவு செய்யப்படாத 439,997 வாகனங்கள் இந்த அமைப்பில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தற்போது சுமார் 5,094,566 பயனர்கள் இந்த கியூஆர் குறியீட்டு அமைப்பைப் பயன்படுத்தி வருகின்றனர் எனவும், இவை எரிபொருள் பயன்பாட்டில் ஒரு சீரான அதிகரிப்பை பிரதிபலிக்கின்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
நாடு முழுவதும் மீண்டும் செயற்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் QR அமைப்பில் பதிவு செய்வதில் ஏற்பட்ட சிக்கல்கள்கள் தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.
வாகன உரிமை பரிமாற்றங்கள் மற்றும் தொலைபேசி எண்கள் உள்ளிட்டவற்றில் சிக்கல்கள் ஏற்பட்டிருந்தன.
இந்த நிலையில், குறித்த சிக்கல் நிலை தொடர்பில் தற்போது தீர்வு காணப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
| QR குறியீட்டினை பதிவு செய்ய இங்கே அழுத்தவும்.. https://fuelpass.gov.lk/ |
எரிபொருள் பற்றாக்குறை
அத்துடன், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வாகனங்களை, அமைப்பில் இருந்து அகற்றுவது தொடர்பான கட்டமைப்பும் திருத்தப்பட்டு, செம்மைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, வாகனங்களின் முந்தைய உரிமையாளர்கள் தங்கள் கணக்குகளிலிருந்து அந்த வாகனங்களை இலகுவாக அகற்ற முடியும்.
முந்தைய உரிமையாளரின் கணக்கிலிருந்து ஒரு வாகனம் அகற்றப்பட்டவுடன், புதிய உரிமையாளரால் சிக்கல்கள் இல்லாமல் அதைப் பதிவு செய்ய முடியும்.

கூடுதலாக, எரிபொருள் நிலைய ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கான QR குறியீடு அமைப்பு குறித்த பயிற்சி திட்டங்கள் தற்போது சுமூகமான செயல்பாடுகளை உறுதி செய்வதற்காக நடந்து வருகின்றன.
எரிபொருள் பற்றாக்குறை குறித்து தேவையற்ற பீதியை பரப்பவோ அல்லது அமைப்பு குறித்து தவறான தகவல்களை உருவாக்கவோ வேண்டாம் என்று பிரதி அமைச்சர் வீரரத்ன பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த QR திட்டத்தின் பயன்பாட்டை திறம்பட முன்னெடுப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய மிக மோசமான குண்டு வீச்சு... 400 கடந்த பலி எண்ணிக்கை News Lankasri