சிறீதரன்-சுமந்திரனுக்கு இடையில் தீர்க்கப்படாத பிரச்சினை! கம்பவாரதி ஜெயராஜ் விடுத்துள்ள எச்சரிக்கை
சுமந்திரனும் ஸ்ரீதரனும் பிரச்சினைகளை எவ்வளவுக்கெவ்வளவு பிற்போடுகிறார்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு அப்பிரச்சினை பூதாகரமாகிக் கொண்டே போகும். அல்லது போக வைப்பார்கள் என கம்பவாரதி ஜெயராஜ் தனது உரலார் கேள்வி,உலக்கையார் பதில் என்ற தொகுப்பில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அந்த தொகுப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
உரலார் கேள்வி :- சுமந்திரனும் ஸ்ரீதரனும் தமக்குள் பேசி பிரச்சினைகளைத் தீர்ப்பார்கள் என்று நினைக்கிறீர்களா?
உலக்கையார் பதில் :- அது அவர்களுக்குத்தான் தெரியும்.ஆனால் ஒன்று! தீர்ப்பது என்று உண்மையிலேயே முடிவு செய்வார்களே ஆனால், எவ்வளவு விரைவில் அக்காரியத்தைச் செய்யமுடிமோ அவ்வளவு விரைவில் அதனைச் செய்து முடிக்க வேண்டும்.
பிரச்சினைகள்
பிரச்சினைகளை எவ்வளவுக்கெவ்வளவு பிற்போடுகிறார்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு அப்பிரச்சினை பூதாகரமாகிக் கொண்டே போகும். அல்லது போக வைப்பார்கள்.
இப்போது பிரச்சினை என்கிற மாட்டின் மூக்கணாங்கயிறு இவ்விருவர் கையிலும் இருக்கிறது.
இன்னும் சில நாட்கள் சென்றால் இவ்விருவரது மூக்கணாங்கயிறும் பிரச்சினைகளை வளர்ப்போரின் கைக்கு போய்விடும். அப்போது இவர்கள் நினைத்தாலும் ஒன்றும் செய்யமுடியாது.
சல்லடையார் சலிப்பு - கூட இருக்கும் கும்பிடு சாமிகள், இவர்களை தம் இஷ்டப்படி இயங்க விடுவார்களா?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 10 மணி நேரம் முன்

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
