தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடும் கட்சிகள் இலங்கையில் இல்லை! லால்காந்த
தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடுக்கும் வகையில் எந்தவொரு கட்சியும் இல்லை எனவும், நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளதாகவும் தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் லால்காந்த தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டியில் நேற்றையதினம் இடம்பெற்ற பொதுத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் யாழில் சிறீதரன் தலைமையில் வேட்பு மனுத் தாக்கல் செய்த தமிழரசுக் கட்சி
தேசிய மக்கள் சக்தியின் மாபெரும் வெற்றி
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது எட்டாகப் பிளவுபட்டுள்ளது, ஐக்கிய தேசியக் கட்சி பெயருக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இல்லாமல் போய்விட்டது.
கண்டி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளதாகவும், பொதுத் தேர்தலுக்காக நாடளாவிய ரீதியில் அனைத்துப் பகுதி மக்களும் திசைகாட்டி சுற்றித் திரண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாவலப்பிட்டி தொகுதி மகிந்தானந்த அளுத்கமவின் கோட்டையாக மாறியிருந்த நிலையில், அந்த கோட்டையை உடைத்து ஜனாதிபதி தேர்தலில் நாவலப்பிட்டி தொகுதியை வெற்றிபெற நாவலப்பிட்டி பிரதேச மக்கள் நடவடிக்கை எடுத்தனர்.
தற்போது ஜனாதிபதி உட்பட இரண்டு அமைச்சர்கள் நாட்டின் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் பேணுவதற்கு செயற்பட்டு வருவதாகவும், பொதுத் தேர்தலின் பின்னர் அமைச்சரவை மற்றும் பிரதி அமைச்சர்களை அமைச்சுக்களுக்கு நியமித்ததன் பின்னர் தேசிய மக்கள் சக்தி அனைத்தையும் நிறைவேற்றும் வகையில் செயற்படும் எனவும் லால்காந்த இதன்போது உறுதியளித்தார்.





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

நயன்தாராவுடன் தனது முதல் படத்தில் நடித்துள்ள மகாநதி சீரியல் நடிகர்.. அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam

தென்னிந்தியாவில் முதன்முறையாக புதிய சாதனை படைத்த விஜய்யின் மதுரை TVK மாநாடு வீடியோ... குஷியில் ரசிகர்கள் Cineulagam

இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri
