வாகன இறக்குமதி தொடர்பான அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடு! வெளியான அறிவிப்பு
அடுத்த வருடம் (2025) பெப்ரவரி மாதம் முதல் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் புதிய அரசாங்கம் இதுவரை கவனம் செலுத்தவில்லை என தெரியவந்துள்ளது.
அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் தனியார் வாகனங்களை இறக்குமதி செய்ய முன்னைய அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.
கடந்த அரசாங்கத்தின் அனுமதி
நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு ஆறு பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளதால், வாகன இறக்குமதிக்கு கடந்த அரசாங்கத்தினால் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
எதிர்வரும் 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதியின் பின்னர் தனியார் வாகனங்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை முழுமையாக தளர்த்த திட்டமிட்டுள்ளதாக கடந்த அரசாங்கம் மேலும் அறிவித்திருந்தது.
இதன்படி, வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான பரிந்துரைகளையும் மத்திய வங்கி வழங்கியுள்ளது.
எவ்வாறாயினும், அடுத்த வருடம் முதல் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் புதிய அரசாங்கம் எவ்வித நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.





உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan
