உக்ரைனில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் மருத்துவ மாணவர்கள் அல்ல!: தாரக பாலசூரிய வெளியிட்ட தகவல்
உக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷ்ய படையினரால் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 7 இலங்கையர்களும் மருத்துவ மாணவர்கள் அல்ல என வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் இன்று (19) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
சட்டவிரோதமாக ஐரோப்பாவிற்கு பயணிக்க முயற்சித்த குழுவினர்

அவர்கள் சட்டவிரோதமான முறையில் ஐரோப்பாவிற்கு பயணிக்க முயற்சித்த குழுவினர் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு எதிராக போர் தொடங்கிய நிலையில், உக்ரைனில் வசிக்கும் 16 மாணவர்கள் உட்பட 90 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் 2022 பெப்ரவரி முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில் உக்ரைனிய அதிகாரிகளின் ஆதரவுடனும் ஒருங்கிணைப்புடனும் திரும்பி வருவதற்கு வசதி செய்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், யுத்தம் இடம்பெற்ற ஆரம்ப காலத்தில் உக்ரைனில் இருந்து இந்த நாட்டுக்கு வருவதற்கு தயாராக இருந்த இலங்கையர்கள் அனைவரும் அழைத்து வரப்பட்டதாகவும் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.
| காகிவ் பகுதியில் சிக்கியிருந்த ஏழு இலங்கையர்கள் மீட்பு - உக்ரைன் ஜனாதிபதி அறிவிப்பு |
| ரஷ்ய படைகளிடம் இருந்து மீட்கப்பட்ட இலங்கை மாணவர்கள் - வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல் |
| ரஷ்ய படைகளிடம் இருந்து மீட்கப்பட்ட இலங்கை மாணவர்களின் தற்போதைய நிலை:உக்ரைன் ஜனாதிபதி தகவல் |
| மீட்கப்பட்ட ஏழு இலங்கை மாணவர்கள் தொடர்பில் உக்ரைனிய அரசாங்கத்திடம் இலங்கை விடுத்துள்ள கோரிக்கை |
| உக்ரைனில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன |
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam