மாவடிப்பள்ளி வீதியின் மருங்கில் தடுப்பு சுவர் அமைப்பு
வெள்ள அனர்த்தம் இடம்பெற்று மதரஸா மாணவர்கள் உள்ளிட்ட பலர் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக அப்பகுதி வீதியின் மருங்கில் தற்போது தடுப்பு சுவர் போன்ற தூண்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
குறித்த தூண்கள் நிர்மாணிக்கப்பட்டு பூரணப்படுத்தும் செயற்திட்டங்கள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்திற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் உட்பட ஏனைய தரப்பினரும் ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றனர்.
மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள்
மேலும், எதிர்காலத்தில் இப்பகுதியில் ஏற்படும் வெள்ள நிலையின் அளவீட்டை இலகுவாக கணீப்பீடு செய்வதற்காகவும் அவ்வழியாக பயணம் செய்யும் பொதுமக்கள் வாகனங்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவும் இந்தத் தூண்கள் நிர்மாணிக்கப்படுகின்றது.
சுமார் 6 அடிக்கும் அதிகமான அளவீட்டுடன் இந்தத் தூண்கள் கொங்கிறீட் கற்களை கொண்டு தடுப்புச்சுவர் போன்று அமைக்கும் வேலைகள் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






காணி நிலம் வேண்டும் பராசக்தி 3 நாட்கள் முன்

Optical illusion: உங்கள் கண்களுக்கு உயிர் உள்ளது எனில் இதில் இருக்கும் நேரான “28” எங்கே உள்ளது? Manithan

மணிக்கு 12,300 கிமீக்கு மேல் வேகம்.., ரஷ்யாவின் RS-26 Oreshnik ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் விவரம் News Lankasri

இந்தியாவிற்கு சிக்கலை ஏற்படுத்தும் நகர்வு... வங்கதேசத்தில் ஆயுதங்களை தயாரிக்க துருக்கி முடிவு News Lankasri

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீதா, அருணை கண்டதும் முத்து செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
