நாளை முதல் அதிகரிக்கப்படும் தேங்காய் விநியோகம்
லங்கா சதொச ஊடாக நாளாந்தம் விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளது.
இதன்படி, நாளை முதல் சதொச கிளைகள் ஊடாக விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கை இவ்வாறு அதிகரிக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க(Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார்.
உற்பத்தி தடை
கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களில் உள்ள சதொச கிளைகளில் வாடிக்கையாளர்கள் நாளை முதல் தேங்காய்களை கொள்வனவு செய்ய முடியும் எனவும், 130 ரூபாவுக்கு ஒரு தேங்காயை கொள்வனவு செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக தேங்காய் உற்பத்தி தடைபட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, பண்டிகைக் காலங்களில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் வசந்த சமரசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 22 நிமிடங்கள் முன்

வெளித்தோற்றத்தால் அனைவரையும் கவரும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

குணசேகரனுக்கு சமமாக உட்கார்ந்து ஜனனி காட்டிய மாஸ், கதிரை வெளுத்த சக்தி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
